Saturday 2 October 2010

குறிப்பிட்ட ஒரு இடத்தில மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது ?

ஒரே வகையான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம்.

ஆனால் விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு நிலப் பகுதிகள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக பரவலாக ஒரு தவறாகக் கருதப் படுகிறது.

நிலப் பகுதிகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று தவறாகக் கருதப் படுவதால் கண்டங்களின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவது புதிராக இருக்கிறது.

நிலத்தின் மேல் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுவதற்கு நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்ததே காரணம்.நிலப் பகுதிகள் ஆங்காங்கே உயரும் பொழுது குறிப்பிட்ட ஒரு இடத்தில மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

விஞ்ஞானி.க.பொன்முடி.

No comments:

Post a Comment