Thursday 21 May 2015

கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.


கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.

தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத  டைனோசர்களின் புதைபடிவங்கள் அண்டார்க்டிகா ,ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

முதன் முதலில் இந்தக் கருத்தை முன்மொழிந்தவர் ஜெர்மன் நடைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர்.குறிப்பாக அவர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள,மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்கள்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், அதன் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து பல கண்டங்களாக உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் அவரின் விளக்கத்தைப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.மாறாக கடல் பகுதிக்குத தற்செயலாக அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் தொற்றிய படி அந்த விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று விளக்கம் கூறினார்கள்.

இந்த நிலையில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,அறுபது சத்தே வீதப் பகுதி பனியால் மூடப் பட்டு இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,பின்னர் அந்தத் தீவானது,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.

வெக்னரின் இந்த விளக்கத்திற்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் மாற்று விளக்கத்தைக் கூற இயல வில்லை. 

தொடர்ந்து வெக்னர்,ஒத்த கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்,

அதன் அடிப்படையில் அவர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,அந்தப் பருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி பாந்த லாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.

குறிப்பாக அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.

அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் விளக்கம் கூறினார்.

வெக்னரின் விளக்கத்திற்கு ஆப்பு வைத்த டைனோசர்கள்.

இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியும் ஆசியக் கண்டத்தின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டது.

இந்த நிலையில் அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,சைபீரியாவின் காக்க நாடு அற்றுப் பகுதியிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு கடுக் குளிர் நிலவும் பனிப் பிரதேசத்தில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய  டைனோசர்கள் கூட்டம் எப்படி வாழ்ந்தது என்ற கேள்விக்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை. 

ஒரு வேளை டைனோசர்கள் பனிச் சூழலில் வாழ்வதற்கு பழகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

ஆனால் ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை ஆனால் சைபீரியாவின் வட பகுதியில் உள்ள காக்க நாடு ஆற்றுப் பகுதியல் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.

அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.மற்ற படி டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.

தற்பொழுது பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும் ,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்ததால்,தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழ்ந்து இருக்க இயலாது.

ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது,வெப்ப நிலை மைனஸ் முப்பது டிகிரி முதல் மைனஸ் ஐம்பது டிகிரி வரை கீழே செல்கிறது.இது போன்ற குறைந்த வெப்ப நிலையில். மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரும் உறைந்து விடும். அதே போன்று தாவரங்களுக்கு உள்ளே இருக்கும் நீர் உறைந்து விடும்.எனவே தாவரங்களால் நீரை உறிஞ்ச இயலாது.எனவே தாவரங்களால் உயிருடன் இருந்திருக்க இயலாது.

இந்த நிலையில் துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

டைனோசர்கள் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரத்தை உண்ணக் கூடியது.எனவே துருவப் பகுதியில் டைனோசர் கூட்டத்துக்கு உணவளித்து இருக்கக் கூடிய அளவுக்கு அடர்ந்த காடுகள் இருந்திருக்க இயலாது.

எனவே டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே பகலும் இரவும் மாறி மாறி ஏற்பட்டு இருக்கிறது.அதற்குக் காரணம் பூமியின் அச்சில் சாய்வு ஏற்படாமல் இருந்ததே காரணம்.

எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.

பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குருங்கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்க சாத்தியம் இருக்கிறது.

ஆனால் தற்பொழுது வெக்னர் கூறிய விளக்கதின் அடிப்படையிலேயே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்கின்றனர்.

குறிப்பாக பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டதுடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.

தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில் ,இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.

இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தோல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர்.

குறிப்பாக  பாலூட்டி விலங்கினங்களானது டைனோசர்கள் அழிந்த பிறகு வட பகுதிக் கண்டங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம் என்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்டையில் அசோக் சாகினி அவர்கள் நேச்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடித்ததில்.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.


இந்த நிலையில் உருவ வங்கி (Morpho Bank )என்று அழைக்கப் படும் ஒரு வலைத் தளம் ஒன்றை துவக்கி அதில் 83 பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்கள் பற்றிய தகவல்களை இடுகையிட்டு தலைமுடி,பல் முதுகெலும்பு என 4,500 வகை பண்புகளை ஒப்பிட்டு,ஸ்டோனி புரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் மாரின் ஒ லியரி என்ற உடற் கூறியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் ,ஆறு ஆண்டு காலம் மேற் கொண்ட ஆய்வில்,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் வாழ்ந்து மடிந்த ஒரு அணில் போன்ற விலங்கில் இருந்தே நாம் தற்பொழுது காணும் பாலூட்டி வகைகள் யாவும் பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்கள்.ஆதாவது டைனோசர்கள் அழிந்த பிறகே வட அமெரிக்காவில் வாழ்ந்த புரோட்டோ அன்குலேட்டம் டோனே என்று அழைக்கப் படும் அந்த பாலூட்டி விலங்கினத்தில் இருந்தே தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கும் 5100 க்கும் அதிகமான பாலூட்டி வகைகளும் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றி இருப்பதாக டாக்டர் மாரின் ஒ லியரி அறிவித்து இருக்கிறார்.மேலும் அந்த விலங்கினமானது மற்ற கண்டங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்றும் டாக்டர் மாரின் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதண் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.


இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச்  சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது  அண்டார்க்டிகா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்ததே காரணம் என்பது,கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் பபுதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வலையைப் பகுதியில் அமைந்து இருக்கும் அலாஸ்காவின் வட பகுதியிலும் சைபீரியாவின் வட பகுதியிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது  இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

-தொடரும்....

Sunday 17 May 2015

நீர்க் கிரகமாக உருவாகிக் கொண்டு இருக்கும் பூமி.

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு குளோபல் வாரமிங்கே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளிவிடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில் புதை படிவ ஆதாரங்கள் மூலம் கடந்த காலத்தில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாகக் கரீபியக் கடல் பகுதியில்,கடல் மட்ட உயர்வால் இறந்து மூழ்கிய,சாதரணமாகப் பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடிய ,அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் ஏன் இறந்தன என்பதைப் பற்றி ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால் கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால்  கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.


இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.


எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.


இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் கடலடிப் பீட பூமியில்,இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில்,மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

எனவே கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் எழு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

அனால் தற்பொழுது அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குக் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களின் வட பகுதிகள்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.இந்த நிலையில் அலாஸ்காவிலும் சைபீரியாவிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு வேளை டைனோசர்கள் பனிச் சூழலில் வாழ்வதற்கு பழகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

ஆனால் ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

 ஆனால் சைபீரியாவின் வட பகுதியில் உள்ள காக்க நாடு ஆற்றுப் பகுதியல் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.

அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.மற்ற படி டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.

இந்த நிலையில், லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலமாகவும்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் பூமிக்கு அடியில் இருந்து வெளிவரும் நீர் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருப்பதம் அதனால் நாம்வாழும் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் பட்டு விடும் என்பது,அதனால் தாவரங்கள் மட்க்ரும் விலங்கினங்கள் யாவும் அழிந்து விடும் நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Saturday 16 May 2015

கடல் மட்டம் என் உயர்கிறது ?

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு குளோபல் வாரமிங்கே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளிவிடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில் புதை படிவ ஆதாரங்கள் மூலம் கடந்த காலத்தில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாகக் கரீபியக் கடல் பகுதியில்,கடல் மட்ட உயர்வால் இறந்து மூழ்கிய,சாதரணமாகப் பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடிய ,அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் ஏன் இறந்தன என்பதைப் பற்றி ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால் கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால்  கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.


இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.


எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.


இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் கடலடிப் பீட பூமியில்,இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில்,மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

எனவே கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் எழு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

அனால் தற்பொழுது அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குக் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களின் வட பகுதிகள்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.இந்த நிலையில் அலாஸ்காவிலும் சைபீரியாவிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை என்பது குரிப்பிடத் தக்கது.ஓர் வேளை டைனோசர்கள் பனிச் சூழலில் வாழ்வதற்கு பழகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.ஆனால் ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை ஆனால் சைபீரியாவின் வட பகுதியில் உல் காக்க நாடு ஆற்றுப் பகுதியல் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.மற்ற படி டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.