Monday 8 June 2015

புதை படிவங்களும் பூமியின் புறப் பகுதி மாற்றங்களும்.

The earth report
புதை படிவங்களும் பூமியின் புறப் பகுதி மாற்றங்களும்.
-விஞ்ஞானி.க.பொன்முடி.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦


பூமிக்கு அடியில் இருக்கும் சுரக்கும் நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது..

உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான் ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.
அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.
பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன் பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூலக்டிக்கப் படும்.அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு சுடு நீர் ஊற்றுக்களே காரணம்.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில் புதை படிவ ஆதாரங்கள் மூலம் கடந்த காலத்தில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாகக் கரீபியக் கடல் பகுதியில்,கடல் மட்ட உயர்வால் இறந்து மூழ்கிய,சாதரணமாகப் பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடிய ,அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால்  கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.


இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.


எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.


இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦


டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.
தற்பொழுது அண்டார்க்டிக்கா ,ஆஸ்திரேலியா ஆகிய தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் அந்தப் பெரிய கண்டம் தனித் தனியாகப் பிரிந்து சிறிய கண்டங்களாக உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும்,கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கு வடகிழக்கே, செட்லாண்ட் தீவுக்கு அருகில் ,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலப் பகுதி மூழ்கிக் கிடப்பதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அந்தக் கடலடி நிலத்தில் இருந்து படிவங்களைச் சேகரித்து ஆய்வு செய்ததில் ,அந்தப் படிவுகளில்,நிலக் கரி உள்பட,பூக்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதும், அதன் அடிப்படையில்,அந்த நிலப் பகுதியானது ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதும், அதன் பிறகு கடலால் மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும், தெரிய வந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் கடலடிப் பீட பூமியில்,இருந்து எடுக்கப் பட்ட,ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் பதிவுகளிலும் கூட,மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் பிரிட்டிஸ் நாட்டின் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.

அந்தத் தீவானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்ததாகவும் ,அதன் பிறகு கடலால் மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும்,தெரிய வந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

எனவே கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் ஏழு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

ஆர்க்டிக் பகுதியில் காணப் படும், ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான  டைனோசர்களின் புதை படிவங்களுக்குப் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

தற்பொழுது தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித் தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.

அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்கா மற்றும் யூரேசியாக் கண்டங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததால் இந்த இரண்டு கண்டங்குளுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாக நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் இருக்கும் அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் இருக்கும் சைப்பீரியாவின் வட பகுதியும் ,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாக ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவானது அறுபது சதவீதம் பனியால் மூடப் பட்டு இருக்கும் நிலையில்,அந்தத் தீவில் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,ஆர்க்டிக் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இதே போன்று மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதியில் இருக்கும் அரிசோனா பாலை வனப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த சதுப்பு நிலக் காடுகள் மற்றும் முதலை போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் ,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதியானது பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு நகர்ந்து வந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில் அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும் சைபீரியாவின் வட பகுதியில் உள்ள காக்கநாடு ஆற்றுப் பகுதியிலும் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால் ஊர்வன வகை டைனோசர்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால் அதற்கு முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

இதில் கொல் வில்லி ஆறு பாயும் அலாஸ்காவின் வட பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது மைனஸ் பத்து டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை நிலவுகிறது.ஜூன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே வெப்ப நிலையானது உறை நிலைக்கு மேலாக உயர்கிறது.மற்றபடி ஒன்பது மாதங்கள் தரையானது பனியால் மூடப் பட்டு இருக்கிறது.
alaskatemperature.png


இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் நிச்சயம் ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகளுடன் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது.

அத்துடன் ,தற்போழுது பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ச்சியாக பகலும், அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாதம் காலம் தொடச்சியாக இரவும் நீடிக்கிறது.இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால்,தாவரங்களால் சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழ்ந்து இருக்க இயலாது.

அத்துடன் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் முப்பது டிகிரி முதல் மைனஸ் ஐம்பது டிகிரி வரை இறங்குகிறது.

இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் தாவரங்களுக்கு உள்ளே இருக்கும் நீரும் உறைந்து விடும்.தரையில் இருக்கும் நீரும் உறைந்து இருக்கும்.எனவே மாதக் கணக்கில் நீரின்றி தாவரங்களால் உயிருடன் இருந்திருக்க இயலாது.குறிப்பாக தாவார உண்ணி டைனோசர்களானது கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.அத்துடன் டைனோசர்கள் ,யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை  உண்ணக் கூடியது.

எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் கூட்டத்திற்கு உணவு அளிக்கக் கூடிய அளவுக்கு அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.எனவே டைனோசர்கள் காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம்.
முக்கியமாக ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
இதன் மூலம் அந்தக் கருத்தானது தவறு எனபதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமும் தாழ்வாக இருந்திருப்பது புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததால் பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,பூமியின் வெப்ப நிலை குறைந்து அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இருந்திருப்பது பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம், கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் தெரிய வந்துள்ளது.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள,மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்கள்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், ஜெர்மன் நடைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர்.

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், அதன் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து பல கண்டங்களாக உருவாகி நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் அவரின் விளக்கத்தைப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.மாறாக கடல் பகுதிக்குத தற்செயலாக அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் தொற்றிய படி அந்த விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று விளக்கம் கூறினார்கள்.

இந்த நிலையில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,அறுபது சத்தே வீதப் பகுதி பனியால் மூடப் பட்டு இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,பின்னர் அந்தத் தீவானது,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.

வெக்னரின் இந்த விளக்கத்திற்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் மாற்று விளக்கத்தைக் கூற இயல வில்லை. 

தொடர்ந்து வெக்னர்,ஒத்த கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்,

அதன் அடிப்படையில் அவர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,அந்தப் பருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி பாந்த லாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.

குறிப்பாக அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.

அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் விளக்கம் கூறினார்.

அத்துடன் பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டதுடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.

தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில்,தென் அமெரிக்கா, ,இந்தியா,ஆப்பிரிக்கா,ஆகிய  நிலப் பகுதிகளானது வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தோல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர்.

குறிப்பாக  பாலூட்டி விலங்கினங்களானது டைனோசர்கள் அழிந்த பிறகு வட பகுதிக் கண்டங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம் என்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் அசோக் சாகினி அவர்கள் நேச்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடித்ததில்.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் ஆசிய வகை டைனோசர் ட்ரூடோண்ட்
இதே போன்று லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில் ஆசியக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கால கட்டத்தில் இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களுடன் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் பட்ட நிலையில் ,இந்தியாவில் ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் உருவ வங்கி ( Morpho Bank )என்று அழைக்கப் படும் ஒரு வலைத் தளம் ஒன்றை துவக்கி அதில் 83 பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்கள் பற்றிய தகவல்களை இடுகையிட்டு தலைமுடி,பல் முதுகெலும்பு என 4,500 வகை பண்புகளை ஒப்பிட்டு,ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தடாக்டர் மாரின் ஒ லியரி என்ற உடற் கூறியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் ,ஆறு ஆண்டு காலம் மேற் கொண்ட ஆய்வில்,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் வாழ்ந்து மடிந்த ஒரு அணில் போன்ற விலங்கில் இருந்தே நாம் தற்பொழுது காணும் பாலூட்டி வகைகள் யாவும் பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்கள்.

அதாவது டைனோசர்கள் அழிந்த பிறகே வட அமெரிக்காவில் வாழ்ந்த புரோட்டோ அங்குலேட்டம் டோனே என்று அழைக்கப் படும் அந்த பாலூட்டி விலங்கினத்தில் இருந்தே தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கும் 5100 க்கும் அதிகமான பாலூட்டி வகைகளும் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றி இருப்பதாக டாக்டர் மாரின் ஒ லியரி அறிவித்து இருக்கிறார்.மேலும் அந்த விலங்கினமானது மற்ற கண்டங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்றும் டாக்டர் மாரின் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.


இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச்  சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
000000000000000000000000000000000000000000௦

தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது.
அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.
இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது.
எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது  யற்கைக்கு மாறான விளக்கம்.

எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில்  காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள்  மூலம்,  கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

கடல் தளம் நிலையாக இருக்கிறது.

கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து என்று வெக்னர் கூறினாலும் கண்டங்களானது கடல் தளத்தைப் பிளந்து கொண்டு நகர்ந்ததற்கு தடயங்கள் எதுவும் காணப் பட வில்லை.
எனவே கண்டங்களின் நகர்ச்சிக்கு ஒரு புதிய விளக்கம் கூறப் பட்டது.

தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு உருவாகி இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் ,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.

இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.

இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொன்மை அதிகமான பாறைத் தீவு இருப்பதன் அடிப்படையில் கடல் தளமானது நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளானது தொன்மை குறைவாக இருப்பதாகவும்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரில் இருந்து தொலைவில் உள்ள பாறைகளின் தொன்மையானது அதிகமாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது.

ஆனால் தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக எரிமலைத் தீவுகளானது கூம்பு வடிவில் இருக்கும்.ஆனால் புனித பீட்டர் மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் எரிமலைப் பாறைகளுக்குப் பதில் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன தீவாக இருப்பதுடன் சமதளத் தீவாகவும் இருக்கிறது.

இதே போன்று ஆர்க்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும்,இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் நானூற்றி ஐம்பது மற்றும் இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் மற்றும் தீவுகள் இருப்பதன் மூலம் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பதுடன்,கடல் தளமானது நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

இந்த உண்மைக்கு மாறாக கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதால்,கடந்த முன்னூறு கோடி ஆண்டுகளில் பாஞ்சியா போன்று ஐந்தாறு சூப்பர் கண்டங்கள் உருவாகிப் பிரிந்து விட்டதாகக் கற்பனையாக விளக்கம் கூறப் படுகிறது.

அதுமட்டுமின்றி இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளங்களானது தொடர்ந்து உருவாகி தனித் தனியாகப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியானது, நில அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல்,கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ச்சியாக கடல்தலப் பாறை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்களானது கடல்தளங்களுடன் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.

இந்த நிலையில் நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரை படம் ஒன்றைத் தாயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது, நில அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல்,தொடர்ச்சியாக இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பூமியின் வட கோளப் பகுதியில் உள்ள கடலடி மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்வதாகக் கூறப் படும்  கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்வதாகக் கூறப் படும்  கடல் தளத்துடன் ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்கள் கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதே போன்று பூமியின் தென் கோளப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.


உணமையில் வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடக்கி நில அதிர்ச்சிகள் தொடர்ச்சியாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை ஏற்பட வேண்டும்.

ஆனால் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட நில அதிர்ச்சி வரை படத்தில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது  தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்த நிலையில், தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் நம்பப் படுகிறது.

அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,வடபகுதியை நோக்கியும்,அண்டார்க்டிக் கண்டதை நோக்கியும் விலகி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,இதில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த கடல் தளங்களுடன் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் வடகிழக்கு திசையை நோக்கி நம்பப் படுகிறது.
இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களுக்கு அடியில் கடல் தளம் உரசிய படி நகர்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.அனால் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒட்டிக் கொண்டு இருந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும்  ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையில் தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் இடை வெளியுடன் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு நகர்ந்து வந்து இருக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் உருவாக வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் நிலையாக இருப்பதும் அதனால் இந்த இரண்டு கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக எரிமலைத் தொடர் ஏன் உருவானது?
குறிப்பாக அண்டார்க்டிகா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச்  கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்தக் கருத்து தவறான கருத்து.

ஏனென்றால் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, அதிக சுற்று வட்டப் பகுதியை நோக்கி ஒரே கடல் தளமாக கடல் தளம் நகர இயலாது.

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டதைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் எரிமலைத் தொடரானது தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.

இதற்கு ஆப்பிரிக்கக் கண்டமானது மேல் நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பதே காரணம்.ஆப்பிரிக்கக் கண்டம் கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் உள்ள கடல் தளத்தில் பிளவுகள் ஏற்பட்டதால் அந்தப் பிளவுகள் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்ததால்,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே காலப் போக்கில் புதை படிவங்களாக உருவாகி கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகின்றன.

அதே போன்று மலைகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் அந்த மழையும் மலைகளைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே காரணம்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦


பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால், கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது,அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்தால் பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதுடன் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து பறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரே சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
பூமிக்கு அடியில் பெரும் பகுதியாக பாறைக் குழம்பு இருப்பதுடன்,பூமியானது தொடர்ந்து குளிர்ந்து கொண்டு இருப்பதால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து நீரும் தொடர்ந்து பிரிந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலந்து கொண்டு இருப்பதும் தொடரும்.எனவே கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து நிலப் பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும்.இதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கை முற்றிலுமாக அழியும்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦