Wednesday 18 November 2009

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

மண்ணுக்கு அடியில் வாழும் மண் புழுக்களால் எதன் மீது ஒட்டிக் கொண்டு பறக்க இயலாது.காரணம் மண் புழுவின் உடலில் இருக்கும் ஈரப் பசைக்கு அவ்வளவு ஓட்டும் தன்மை கிடையாது.

அதே போன்று தரைக்கு அடியில் உள்ள இடைவெளிகளில் இருக்கும் காற்றை சுவாசித்து வாழும் மண் புழுக்களால் கடல் நீரில் மிதக்க இயலாததால் உடனே மூழ்கி இறந்து விடும்.

மேலும் மண் புழுவின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அதிக நேரம் காற்றிலும் வெயிலிலும் மண் புழுக்கள் இருந்தாலும் உயிர் இழக்க நேரிடும்.

இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கும் கூட; மண் புழுக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரவி, புது வகை மண் புழுக்களாக உருவாகியிருப்பது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

No comments: