Sunday, 12 December 2010

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

பெருங் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கும் பல்வேறு கண்டங்களில் விலங்கினங்கள் காணப் பபடுவது நீண்ட காலமாகவே ஒரு புதிராக இருந்தது.


இந்தப் புதிருக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெக்னர் என்ற ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர் முன்னொரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டம் கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ; அதன் பிறகு அந்தப் பெரிய கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள எழு கண்டங்களும் உருவாகின என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.


ஆனால் இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வுகளில் விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் குறிப்பாக எந்த எந்த காலக் கட்டத்தில் தோன்றின என்பதை அறிய முடிந்தது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கண்டங்கள் பிரிந்தாகக் கருதப் பட்ட கால கட்டத்திற்குப் பிறகும் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய புதிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவர வகைகள் பல்வேறு கண்டங்களில் காணப் படுகிறது.


எனவே தற்பொழுது புதிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கடல் நீரோட்டங்கள் மூலம் தற்செயலாக மற்ற கண்டங்களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள்.

ஆனாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் காணப் படும் வாதாம் பருப்பு வகையைச் சேர்ந்த மாக்கடமியா என்ற தாவரமும் தென் ஆப்பிரிக்காவில் காணப் படும் பிராபிஜம் என்ற தாவரமும் தென் அமெரிக்காவில் காணப் படும் பனாப்சிஸ் என்ற தாவரமும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பொது மூதாதையில் இருந்து தோன்றியிருப்பது மரபணு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஆனால் இந்தக் கண்டங்கள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தனித் தனியாகப் பிரிந்து விட்டது என்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் காணப் படும் மாக்கடமியா மரத்தின் கொட்டையானது கல்லைப் போன்று கனமாக இருப்பதால் காற்றின் மூலமாகவோ அல்லது கடல் வழியாகவோ பரவ இயலாது என்பதால் மாக்கடமியா தாவரம் எப்படி ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு பரவியது என்பதை கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்களால் விளக்க இயலவில்லை.


கடலுக்கு அடியில் டைனோசர்.

குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.


அதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து தோண்டி எடுக்கப் பட்ட, இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.


எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.

இவ்வாறு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்களும் தாவர வகைகளும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவியிருகின்றன.


அதே போன்று இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.


கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீர் கடலில் கலப்பதால்தான் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.


பூமி தோன்றி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகியிருப்பது புவிப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதின் மூலம் தெரியவந்திருகிறது.

மேலும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலப் பகுதிகள் கடல் மட்டத்தில் இரண்டாயிரம் அடி உயரத்திலேயே அமைந்திருகிறது.


இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருப்பதுடன் மனிதர்கள் வாழ்ந்த நிலப் பகுதிகளும் இன்று இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.

எனவே பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

Tuesday, 30 November 2010

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமி தோன்றி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டிருகிறது.

கடலின் சராசரி ஆழம் நான்கு கிலோமீட்டர்.

நிலப் பகுதிகள் யாவும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் அடி உயரத்திலேயே அமைந்திருக்கிறது.

ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் பதினோராயிரம் அடி (இரண்டு கிலோ மீட்டர்)உயர்ந்திருப்பதுடன்; மனிதர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளையும் கடல் மூழ்ககடித்திருப்பது பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

Saturday, 6 November 2010

பத்திரிக்கை செய்தி வெளியீடு.

பத்திரிக்கை செய்தி வெளியீடு.

விஞ்ஞானி.க.பொன்முடி,
சென்னை 600 034,


மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.

பொருள்:நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு , பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதே காரணம். ஆய்வில் கண்டு பிடிப்பு



நிலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளில் காணப் படுவதற்கு ஒன்றாக இருந்த கண்டங்கள் மற்றும் தீவுகள் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்ளும் பொழுதே நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்ததே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு பரவியதற்கு காரணம்.

கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மூன்று முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆதாரம்,1

நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கும் முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம்.

நீர் யானைகளால் நீரில் நீந்த இயலாது.முக்கியமாக நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது.காரணம் நீர் யானைகள் மூவாயிரம் கிலோ எடையுள்ள விலங்குகள்.

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டார் தொலைவில் இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைபடிவங்கள் காணப் படுகின்றன.

எலும்புப் புதைபடிவங்களின் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த குள்ள வகை நீர் யானைகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவுக்கு வந்து சேர்ந்த பெரிய வகை நீர் யானைகளில் இருந்து தோன்றியது என விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.


முக்கியமாக ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

இதே போன்று மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சைப்ரஸ், சிசிலி, மால்ட்டா,
மற்றும் கிரிட்டி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுகிறது.

ஆனால் சைப்ரஸ் தீவிற்கு நீர் யானைகள் எப்படி வந்தன என்பதை விஞ்ஞானிகளால் விளக்க இயலவில்லை.

நீரில் மிதக்கக் கூட இயலாத நீர் யானைகள் நிச்சயம் தரை வழியாகவே தீவு நிலப் பகுதிகளை அடைந்து இருக்க முடியும்.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததாலேயே தரை வழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்குப் பரவியிருப்பது, மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் உறுதியாகிறது.

ஆதாரம்,2

இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே டைனோசர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும் கடலுக்கு அடியில் கிடைத்த
டைனோசரின் எலும்புகள் புதை படிவங்கள் மூலமும் உறுதியாகிறது.

ஆதாரம்,3

மேலும் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே விலங்கினங்கள் பல கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன்னொரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் சரியல்ல.

உண்மையில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு இடையே தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம்.


இந்த நிலையில் நிலப் பகுதிகளின் மத்தியப் பகுதியிலும் கூட... அதிலும் குறிப்பாக மலைகளின் மேலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

எனவே நிலப் பகுதிகள் யாவும் முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருந்திருகின்றன.தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயந்து இருக்கின்றன.

பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து, வெப்பமான வாயுக்கள் மற்றும் நீராவி எரிமலைகளின் வழியாக வெளியேறுகின்றன.

இதனால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால், பூமிக்கு அடியில் அடர்த்தி குறைவான புதிய பாறைத் தட்டுகள் உருவாகி மேல் நோக்கி உயருகின்றன.எனவே நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்கின்றன.


இவ்வாறு நிலப் பகுதிகள் ஆங்காங்கே மேல் நோக்கி உயரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையே ஏற்படும் உரசலால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது .

Saturday, 2 October 2010

குறிப்பிட்ட ஒரு இடத்தில மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது ?

ஒரே வகையான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம்.

ஆனால் விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு நிலப் பகுதிகள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக பரவலாக ஒரு தவறாகக் கருதப் படுகிறது.

நிலப் பகுதிகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று தவறாகக் கருதப் படுவதால் கண்டங்களின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவது புதிராக இருக்கிறது.

நிலத்தின் மேல் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுவதற்கு நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்ததே காரணம்.நிலப் பகுதிகள் ஆங்காங்கே உயரும் பொழுது குறிப்பிட்ட ஒரு இடத்தில மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

விஞ்ஞானி.க.பொன்முடி.

பத்திரிகை செய்தி வெளியீடு.

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.

நம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வருகிறது.

நானூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் ஆஸ்திரேலியா மற்றும் கிரீன்லாந்து தீவில் காணப் பட்டத்தின் அடிப்படையில் நம் பூமி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டிருகிறது.

இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருப்பது பல தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் உறுதியாகத் தெரிய வந்திருகிறது.

குறிப்பாக நீர் யானைகளால் நீரில் நீந்த இயலாது.முக்கியமாக நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது.

தற்பொழுது நிலத்தில் விலங்குகளில் யானை மற்றும் காண்டா மிருகத்திற்கு அடித்த படியாக நீர் யானை மூன்றாவது பெரிய விலங்கு ஆகும்.

இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு குகையில் உலகில் வேறெங்கும் காண இயலாத தனி வகை குள்ள நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது.

பொதுவாக நீர் யானைகள் தண்ணீருக்கு அடியில் நடக்கும் .ஐந்து நிமிடங்கள் வரை காற்று இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.அதன் பிறகு காலால் உந்தித் தள்ளி நீருக்கு மேல் வந்து சுவாசிக்கும்.மற்ற படி நீர் யானைகளால் நீந்தவோ மிதக்கவோ இயலாது.

சைப்ரஸ் தீவிற்கு நீர் யானைகள் எப்படி வந்திருக்கும் என்று தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.


இருநூறு முதல் முன்னூறு கிலோ எடை யுடைய குள்ள வகை நீர் யானைகளால் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலமாகவும் மிதந்தபடி சைப்ரஸ் தீவிற்கு வந்து சேர்ந்திருக்க இயலாது.குறிப்பாக நீர் யானைகள் நீரில் மூழ்கியிருந்தாலும் அவற்றின் கண் காது மற்றும் மூக்குத் துவாரங்கள் நீருக்கு மேல் இருக்கும் வண்ணம் நீர் யானையின் கண் காது மற்றும் மூக்குத் துவாரங்கள் தலையின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.

ஆனால் சைப்ரஸ் தீவில் காணப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் மூக்குத் துவாரங்கள் கீழ் புறமாக அமைந்திருந்தது. அதே போன்று சைப்ரஸ் தீவுக் குள்ள வகை நீர் யானைகளின் கால் எலும்புகளும் தரை வாழ்க்கைக்கு ஏற்ற படி இருந்தது.

மேலும் நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம்.மேலும் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் சிசிலி கிரிட்டி மால்டா ஆகிய தீவுகளிலும் பல்வேறு பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவது குறிப்பிடத் தக்கது.

அத்துடன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மடகாஸ்கர் தீவிலும் மூன்று வகையான குள்ள நீர் யானைககள் வாழ்ந்திருப்பது எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

தற்பொழுது ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று வகை நீர் யானைகளின் மூதாதைகளும் தனித் தனியாகக் கடல் பயணம் செய்து மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

குறிப்பாக மடகாஸ்கர் தீவு குள்ள நீர் யானைகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரியவந்திருகிறது.நானூறு கிலோ எடையுடன் நீந்தவோ மிதக்கவோ இயலாத நீர் யானைகள் நிச்சயம் தரைவழியாகவே மடகாஸ்கர் நிலப் பகுதிக்கு வந்திருக்க முடியும்.


முக்கியமாக ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருகிறது.

எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது சைப்ரஸ் கிரிட்டி சிசிலி மால்டா மற்றும் மடகாஸ்கர் ஆகிய தீவுகளில் காணப் படும் பல்வேறு வகையான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைபடிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.

-விஞ்ஞானி.க.பொன்முடி.

Sunday, 26 September 2010

பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

முதலைகள் வெப்ப மண்டலப் பகுதியில் வாழக் கூடிய விலங்கினம்.

ஆனால் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் எல்ஸ்மர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் எலும்புப் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்து இருகின்றனர்.

மேலும் வட துருவப் பகுதியில் அமைந்திருக்கும் கிரீன்லாந்து தீவில் வண்ணத்துப் பூசிகள் பறந்த காடுகள் இருந்ததிற்கு ஆதாரமாக பைன் ஈவ் போன்ற மரங்களின் புதை படிவங்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

மேலும் வடக்கு மற்றும் தென் துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் காடுகள் இருந்திருப்பதற்கு ஆதாரமாக டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

எனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் பூமி அதிக வெப்பமாக இருந்திருப்பது விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.


எனவே நம் பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.


குறிப்பாக பத்தாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டிருக்கும் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்கள் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவது கடல் மட்டம் பத்தாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதையும் நிரூபிக்கிறது.


எனவே பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதற்கு கடல் பரப்பு அதிகரித்ததே காரணம்.


கடல் மட்டம் உயர்த்ததற்கும் அதிகரித்ததற்கும் கடலுக்கு அடியில் இருக்கும் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து சுரக்கும் நீர் கடலில் கலப்பதே காரணம்.

-விஞ்ஞானி.க.பொன்முடி.

Sunday, 12 September 2010

பூமி தன் அச்சில் சாய்ந்திருப்பது ஏன்?

பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் பூமியின் வடக்கு மற்றும் தென் துருவப் பகுதிகளில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கிறது.

ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருந்திருக்கின்றன.

அத்துடன் பகல் வாழ்க்கை வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களும் வட துருவம் மற்றும் தென் துருவப் பகுதிகளில் காணப் படுகிறது.

சூரிய ஒளியின்றி நிச்சயம் ஆறுமாத கால இரவுக் காலத்தில் அடர்ந்த காடுகளும் டைனோசர்களும் உயிர் வாழ்ந்திருக்க இயலாது.

எனவே இந்த காலக் கட்டத்தில் பூமி தன் அச்சில் சாய்ந்திருக்காமல் இருந்திருந்தால்தான் துருவப் பகுதிகளில் ஒளி நேரடியாகப் பட்டு டைனோசர்கள் கூட்டதுடன் வாழ்ந்த அடர்ந்த காடுகள் இருந்திருக்க இயலும்.

எனவே ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமி தற்பொழுது இருப்பதைப் போன்று தன் அச்சில் இருபத்தி மூன்று பாகை சாய்ந்திருக்கிறது.

இவ்வாறு பூமி தன் அச்சில் சாய்ந்ததற்கு, சூரியனால் ஈர்க்கப் பட்ட ஒரு
கிரகம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் குறுக்கிட்டிருக்க வேண்டும்.

அது நிலவாகவும் இருக்கலாம்.

அல்லது வெள்ளி கிரகமாகவும் இருக்கலாம்.

காரணம் சூரியனால் ஈர்க்கப் பட்டு பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அருகில் வந்த கிரகம் மறுபடியும் சூரியனின் ஈர்ப்பு விசையை விட்டு விலகிச் செல்வது கடினம்.

-விஞ்ஞானி.க.பொன்முடி.