Thursday, 16 July 2026
மண்ணிலிருந்து ...விண்ணுக்கு...
எனது முக நூல் பக்கத்தில் இருந்து சில பதிவுகள்.
00000
உள் நாட்டில் ஏற்படும் மர்மநில அதிர்ச்சிகளுக்குக் காரணம் தெரியாது.
உள் நாட்டில் ஏற்படும் மர்ம நில அதிர்ச்சிகளுக்குக் காரணம் தெரியாது என்று புவியியல் வல்லுநர் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து,அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை ஆதாரமின்றி நம்புகின்றனர்.
ஆனால், இந்தக் கொள்கையின் அடிப்படையில்,உள் நாட்டுப் பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் குறித்து விளக்கம் அளிக்க இயலாது.
எனவே, இது போன்ற நில அதிர்ச்சிகளானது ''மர்ம நில அதிர்ச்சிகள்'' என்று புவியியல் வல்லுனர்களால் அழைக்கப் படுகிறது.
இது போன்ற நில அதிர்ச்சிகள் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்து தெரியாத நிலையிலேயே,மத்திய அமெரிக்கா, ஐரோப்பா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்,புவியியல் வல்லுனர்கள் இருக்கின்றனர், என்று நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, புவியியற்பியலாளர், டாக்டர் சேத் ஸ்டீன் தெரிவித்து இருக்கிறார்
The plate tectonics revolution of the 20th century elegantly explained why most earthquakes occur where they do – at Earth's plate boundaries. It didn't explain, however, the occurrence of intraplate quakes and the deformation processes that give rise to them. As a result, geologists studying areas like the central U.S., western Europe, and Australia, don't know what causes these quakes, how often they will happen in the future, and how dangerous they are. "Progress has been slow and somewhat difficult," said volume editor Seth Stein of Northwestern University, Evanston, Illinois, USA. "Because deformation within plates is slow compared to more rapid plate boundary motions, seismicity is much lower and harder to study."
0000
கண்டத் தட்டுக் கொள்கைக்கு வந்த சோதனை.
உயிரினங்கள் எவ்வாறு ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவியது, என்பது குறித்து ஆராயும் அறிவியல் பாடப் பிரிவுக்குப் பயோஜியோகிராபி (Biogeography ) என்று பெயர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்,பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட இளம் ஆராய்ச்சியாளரான டார்வின்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்த பொழுது,அங்குள்ள ஆறுகளிலும் குட்டைகளிலும்,ஏற்கனவே அவர் ஐரோப்பாக் கண்டத்தில் பார்த்த நன்னீர் உயிரினங்கள் காணப் படுவதைக் கண்டு எப்படி இந்த உயிரினங்கள் பல்லாயிரம் மைல் கடல் பகுதியைக் கடந்து இந்தக் கண்டத்துக்கு வந்திருக்க முடியும் என்று வியப்படைந்தார்.
குறிப்பாக அவர் குளம் குட்டைகளில் இருக்கும் நத்தைகளானது, பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். இது போன்று, பெருங் கடல் பகுதியைத் தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் தற்செயலாகக் கடந்தன என்று கூறப் படும் விளக்கமானது, 'பரவல் முறை' (dispersal) என்று அழைக்கப் படுகிறது.
ஆனால், வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
இது போன்ற விளக்கமானது 'நிலப் பிரிவு முறை' ( vicariance ) என்று அழைக்கப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியில் ஒரே ஒரு பெரிய கண்டம் இருந்ததாக நம்பப் படுகிறது.அந்தப் பெருங் கண்டமானது பாஞ்சியா என்று அழைக்கப் படுகிறது.
அதன் பிறகு, பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்து,லாரேசியா மற்றும் கோண்டுவாணா என இரண்டு கண்டங்களாக உருவாகி,வடக்கு தெற்காக, நகர்ந்ததாக நம்பப் படுகிறது.
அதே போன்று,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்து, கிழக்கு மேற்காக நகர்ந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியக் கண்டங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் பகுதிக் கோண்டுவாணாவும்,பல பகுதிகளாகப் பிரிந்து, வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்தது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
அதன் பிறகு,மரபணு மற்றும் கார்பன் காலக் கணிப்பு பற்றிய, அறிவியல் பிரிவுகளின், வளர்ச்சிக்குப் பிறகு,மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும்,காணப் படும்,பல தாவர வகைகளும்,விலங்கினங்களும்,கண்டங்கள் பிரிந்ததாக நம்பப் படும் காலத்துக்குப் பிறகு,பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
உதாரணமாகத் தென் பகுதிக் கண்டங்களில்,புரேட்டியேசியே என்று அழைக்கப் படும், தாவர வகைகள் ,காணப் படுவதற்கு, முதலில்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில் ( vicariance ) விளக்கம் கூறப் பட்டது. ஆனால், தற்பொழுது மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வில்,அந்தத் தாவர வகைகளானது,கண்டங்கள் மற்றும் தீவுகள் பிரிந்ததாக நம்பப் பட்ட காலத்துக்குப் பிறகு,பரிணாம வளர்ச்சியில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படும்,புரேட்டியேசியே வகைத் தாவரங்களானது,நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே, தற்பொழுது,புரேட்டியேசியே வகைத் தாவரங்களானது, தென் அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீவில் காணப் படுவதற்கு,அந்தத் தாவரத்தின் விதைகளானது,காற்று மூலமாக,மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் (dispersal) என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால்,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படும்,மாக்டேமியா என்று அழைக்கப் படும், புரேட்டியேசியே வகைத் தாவர வகையானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது,அந்தக் கண்டங்கள் பிரிந்த ,ஐந்து கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். ஆனால்,மாக்டேமியாவின் விதைகளானது,கல்லைப் போன்று கனமாக இருப்பதால்,காற்றின் மூலமாகவும்,கடலின் வழியாகவும், ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்க முடியாது என்று,
இது குறித்த ஆய்வை மேற்கொண்ட,ஆஸ்திரேலியாவின் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் வெஸ்டன் தெரிவித்து இருக்கிறார். மேலும், ''இதனை விளக்குவதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது'' என்றும் டாக்டர் பீட்டர் வெஸ்டன் தெரிவித்து இருக்கிறார்.
The strange case of the macadamia tree But more puzzling is the strange case of the macadamia. Molecular dating shows the variety found in Africa's Western Cape split from the Australian variety about 50 million years, or 50 million years after the accepted time of continental fragmentation. Because macadamia nuts are heavy and rock-like, it's unlikely they were carried by the wind or even floated across the ocean, Weston says. The split also predates humans, ruling out that they were distributed by hand. "I find it hard to explain," he admits.
http://www.abc.net.au/science/articles/2006/09/20/1744327.htm
முன்னதாக,வட துருவப் பகுதியில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கும், கண்டங்களானது கடல் தளங்களுடன், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்களால், உரிய விளக்கத்தைக் கூற இயல வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கியமாக,நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிகளுக்கும் கூட,கண்டங்களானது கடல் தளங்களுடன், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்களால், உரிய விளக்கத்தைக் கூற இயல வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
00000
,நகரும் கண்டங்கள் பற்றி, தொல் விலங்கியல் வல்லுனரின் கருத்து.
டைனோசர்களின் புதைப் படிவங்களானது,பல்வேறு தீவுகளிலும், தீவுக் கண்டங்களிலும், காணப் படுவதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த பிறகு,பாலூட்டி வகை விலங்கினங்கள் பல்கிப் பெருகின.
இந்தக் கால கட்டத்தில்,இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களானது,தீவுக் கண்டங்களாக நகர்ந்து கொண்டு இருந்ததாகப் புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் நமுகின்றனர். குறிப்பாக,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு- ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு-நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு-, பரிணாம வளர்ச்சியில் தோன்றிய பாலூட்டி வகை விலங்கினங்களின் புதைப் படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு,அந்த விலங்கினங்களானது,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி,பல நாட்கள் உணவும் நீருமின்றி கூட்டமாகவோ,அல்லது ஒரு ஜோடி அல்லது ஒரே ஒரு கர்ப்பிணி விலங்காவது அரை மயக்க நிலையில்,அடுத்த கண்டத்தின் கரையொதுங்கிய பிறகு,குட்டிகளை ஈன்று இனத்தைப் பெருக்கி இருக்கலாம் என்று புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால், இது போன்ற விளக்கத்தை,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுனரும்,புவியியல் பேராசிரியருமான,டாக்டர், ஜியார்ஜ் கெய்லார்ட் சிம்சன், ஏற்றுக் கொள்ள வில்லை.
முக்கியமாக, அவர் ,தொல் விலங்குகளின் புதைப் படிவங்களை ஆய்வு செய்து அவைகளை இனவகைப் படுத்தியவர் மட்டுமின்றி, அந்த விலங்கினங்களானது, எப்பொழுது, எவ்வாறு, மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தன, என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டவர். இந்த நிலையில் ,அவர்,பாலூட்டி வகை விலங்களின் புதைப் படிவங்கள் மற்றும் அவைகளின் பரிணாம வரலாறை,நகரும் கண்டங்கள் கொள்கையின் அடிப்படையில்,விளக்க முடியாது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். CONCLUSIONS. Doctor Simpson's positive assertion, that "the known past and present distribution of land mammals cannot be explained by the hypothesis of drifting continents,"
00000
மெசோசாரஸ் மர்மம் விலகியது.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள, மெசோசாரஸ் என்று அழைக்கப் படும்,முதலை போன்ற,ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர்,கடற் கரையோரம் வாழ்ந்த ஒரு விலங்கால் ,நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து ,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்க முடியாது.
எனவே, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டங்களாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்து இருந்தார்.
அவரின் விளக்கத்தைப் புவியியல் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு,கண்டங்களுடன் கடல் தளங்களும் சேர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன, என்று விளக்கம் கூறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்,நான்,கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்குக் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம் என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இந்த நிலையில்,தற்பொழுது,அட்லாண்டிக் பெருங் கடல்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும் பகுதிகளிலும்,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவிலும்,ஒரே இனவகையைச் சேர்ந்த, நன்னீர் நண்டுகள் காணப் படுவதற்கு,உயிரியல் வல்லுனர்கள்,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால்,தீவுகள் தொடர்ச்சியாக இருந்ததால்,நன்னீர் நண்டுகள் இந்த இடங்களுக்குப் பரவி இருக்கிறது, என்ற விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
Johngarthia lagostoma is found on Ascension Island, Ilha Trindade, Fernando de Noronha and Atol das Rocas. On Ascension Island, The geographic distribution of J. lagostoma across a small number of islands in the southern Atlantic Ocean is very unusual, and difficult to explain by planktonic dispersal. Its nearest relatives are the other species of Johngarthia, two of which (J. malpilensis and J. planata) inhabit islands in the Pacific Ocean off Central America, and one (J. weileri) is found on islands in the Gulf of Guinea.[2] Some authors have suggested the existence of former islands, now submerged, which could have acted as "stepping stones" for the colonisation of Ascension Island; the isolation of Ascension Island from any other land mass makes transportation of either larvae or adults difficult.[2]
இதன் மூலம்,இது நாள் வரை, அறிவியல் உலகில் விடுவிக்கப் படாத நிலையில் இருந்த, மெசோ சாரஸ் மர்மம் விலகி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது,எனது விளக்கத்தை உறுதிப் படுத்தும் வண்ணம் மேலும் ஒரு உறுதியான ஆதாரம் கிடைத்து இருக்கிறது.
000000
கடல் பூமிக்குள் இருந்து வந்தது.
''டார்வின் குயாட்''
தற்பொழுது, பசிபிக் பெருங் கடலின் மத்திய பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து நான்காயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் ''டார்வின் குயாட்'' என்று அழைக்கப் படும் சமதள மலையின் மேல் ,ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் டைனோசர் காலத்தில் வாழ்ந்த சிப்பி வகை உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த உயிரினமானது ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடியது.
இதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
பசிபிக் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் குயாட்டுகள் என்று அழைக்கப் படும் பல சமதள மலைகள் மூழ்கிக் கிடக்கின்றன.
அதில், ''கேப் ஜான்சன் குயாட்'' என்று அழைக்கப் படும் கடலடி மலையானது தற்பொழுது கடல் தரையில் இருந்து பத்தாயிரம் ஆதி உயரத்திற்கு எழுந்தது இருக்கிறது.அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிபிடக்கிறது.
அதன் மேற்பகுதியானது சுண்ணாம்புப் பாறையால் மூடிக் கிடக்கிறது.அதில் இருந்து,ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய ''பொராமினி பெரா'' மற்றும் ''ரூடிஸ்ட்'' உயிரினங்களின் புதை படிவங்கள் எடுக்கப் பட்டுள்ளது.
இந்தக் கடலடி மலையானது பனிரெண்டு கோடி ஆண்டுகள் தொன்மையானதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
இதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
அத்துடன் கடலானது பூமிக்குள் இருந்து சுரந்த நீரால் உருவாக்கி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
ரூடிஸ்ட் சிப்பியின் புதை படிவங்களானது, நிலத்தின் மேல் உள்ள மலைகளின் மேலும், கடலடி மலைகளின் மேலும் காணப் படுவதற்கு காரணம் என்ன?
ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் ஒரு வகை சிப்பி வகை உயிரினமானது டைனோசர் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினம் ஆகும்.
இதன் புதை படிவங்களானது, பூமத்திய ரேகைப் பகுதியில் அதாவது வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள மலைகளின் மேல் காணப் படுகிறது.
இதே போன்று ரூடிஸ்டின் படிவங்களானது, பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி சம தள மலைகளின் மேலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ரூடிஸ்டின் புதை படிவங்களானது, நிலத்தின் மேல் உள்ள மலைகளின் மேலும், கடலடி மலைகளின் மேலும், காணப் படுவதற்கு காரணம் என்ன?
ஆரம்பத்தில் நமது பூமியானது ஒரு பாறைக் குழம்பு கோளமாக இருந்தது.
அதன் பிறகு மெல்ல மெல்ல குளிர்ந்ததால்,பூமியின் புற ஓடு உருவானது.
பாறைக்கு குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையானது பொழுது அதில் இருந்து பிரிந்த நீரால்,புவித் பரப்பில் சிறிய சிறிய நீர் நிலைகள் உருவானது.
இதே போன்று பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்களால் மெலிதான வளி மண்டலம் உருவானது.
தொடர்ந்து பூமிக்குள் இருந்த பாறைக்கு குழம்பானது குளிர்ந்த பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்ததால் பூமிக்கு மேல் கடல் உருவானது.இந்த நிகழ்வில் உருவான வாயுக்களால் வளி மண்டலத்தின் அளவும் பெரிதானது.
அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில், பாறைத்த தட்டுகள் உருவான பொழுது, பாறைக் குழம்பில் இருந்து, நீரும் வாயுக்களும் பிரிந்ததால்,பாறைக் குழம்பில் உருவான பாறைத்த தட்டுகளின் அடர்த்தியானது குறைவாக இருந்தது.
இவ்வாறு, அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான, அடர்த்தி குறைந்த பாறைத்த தட்டுகளானது, மேல் நோக்கி உயர்ந்ததால்,புவிப் பரப்பில் கண்டங்கள் உருவானது.
அதே போன்று,பூமிக்கு அடியில் பாறைத்த தட்டுகள் உருவான பொழுது பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் தொடர்ந்து கடலில் சேர்ந்ததால்,கடல் மட்டமும் உயர்ந்தது.
அதனால் கடலின் ஆழமும் அதிகமானது.
இவ்வாறு,ஆழமற்ற கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து மலைகள் உருவானதற்கு ஆதாரமாக நிலத்தின் மேல் காணப் படும் மலைகளின் மேல் ரூடிஸ்டின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
அதே போன்று கடல் மட்டமானது பல்லாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு ஆதாரமாக கடலடி மலைகளின் மேல் ரூடிஸ்டின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு இடையில் இருந்த காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்கள், ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் எல்லாம் கடலால் பிரிக்கப் பட்டது.
ஆனால், தற்பொழுது அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில், டைனோசர்களின் புதை படிவங்ககள் காணப் படுவதற்கு, கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறாக நம்பப் படுகிறது.
0000
பவளத் திட்டுகள் எப்படி உருவாகின? நீயா? நானா?
தற்பொழுது பவளத் திட்டுகள் என்றாலே,கடலில் கழிவுகள் கலப்பதன் காரணமாகப் பவளத் திட்டுகள் அழிவது குறித்த விஷயமே நினைவுக்கு வரும். அனால் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு,பவளத் திட்டுகள் என்பது விஞ்ஞானிகளிடையே ஒரு தீர்க்கப் படாத புதிராகவும் மர்மமாகவும் இருந்ததுடன்,காரசாரமான விவாதப் பொருளாகவும் இருந்தது.
ஆம்,பவளத் திட்டுகளானது குண்டூசித் தலை அளவுள்ள சிறிய உயிரினங்களால் உருவாக்கப் படுகிறது. பவளங்கள் என்று அழைக்கப் படும் அந்த உயிரினமானது ஒரு சிறிய தொட்டி போன்ற உடலின் மேற்பகுதி வாயைச் சுற்றிலும், அசையும் இதழ்களைக் கொண்டிருக்கிறது. அந்த இதழ்கள் அசையும் பொழுது, கடல் நீரானது தொட்டி போன்ற பகுதிக்குள் செல்லும் பொழுது, அதில் இருக்கும் நுண்ணுயிரிகளானது பிடித்துண்ணப் படுகிறது.
குறிப்பாகப் பவளங்கள், சூரிய ஒளியின் உதவியுடன், ஒளிச் சேர்க்கை செய்து, வாழும் பாசிகளை உண்டு வாழ்வதால்,பவளங்களானது சூரிய ஒளி பரவக் கூடிய ஆழம் குறைவான கடல் பகுதியிலேயே வாழ்கின்றன.அதிலும் குறிப்பாக சூரிய ஒளி பரவக் கூடிய இருநூறு அடி ஆழத்தில் பவளங்கள் வாழ்கின்றன.
அத்துடன் பவளங்களானது தங்களின் மெலிதான உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக,கால்சியம் கார்பனேட் என்று அழைக்கப் படும் , சுண்ணாம்புப் பொருளைச் சுரக்கக் கூடியது.
எனவே பவளங்கள் இறக்கும் பொழுது,அந்தப் பவளத்தால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்களானது,படிவதால் பவளத் திட்டுகள் உருவாகி,வளர்கின்றன. அந்தப் பவளத் திட்டுகள் மேல் புதிய பவளங்கள் வாழ்கின்றன.
எனவே கடல் மட்டம் உயரும் பொழுது, அதற்கேற்ப பவளத் திட்டுகளும் வளர்ந்தால்தான் பவளங்கள் உயிருடன் இருக்க முடியும். எனவே பவளங்களானது பொதுவாக ஆழமற்ற கடற் கரையோரப் பகுதிகளிலேயே காணப் படுகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் மன்னார் வளை குடாப் பகுதியில் பவளத் திட்டுகள் காணப் படுகின்றன. இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதி நெடுகிலும், கடற் கரையை ஒட்டிய படி, இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கின்றன.
இந்தத் திட்டுகளானது கப்பல்கள் செல்லத் தடையாக இருப்பதால் தடை அரண் பவளத் திட்டுகள் (The Great Barrier Reef) என்றும் அழைக்கப் படுகின்றன.
இந்த நிலையில் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு வளைய வடிவில் உருவாகி இருக்கும் சில பவளத் திட்டுகளின் மத்தியப் பகுதியானது, கடல் நீரால் நிரம்பி இருக்கின்றன.
முதன் முதலில் பசிபிக் பெருங் கடல் பகுதியில் பயணம் செய்த ஐரோப்பியர்களுக்கு, பசிபிக் பெருங் கடலில் உருவாகி இருந்த பவளத் திட்டுகள், விளங்கிக் கொள்ள முடியாத புதிராக இருந்தது. எப்படி ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய பவளங்கள், பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் வளர்ந்தன?என்று ஐரோப்பியர்கள் வியந்தனர்.
இது குறித்து ஆராய்வதற்காக ,பசிபிக் பெருங் கடலில் பயணம் செய்து பல தீவுகளைக் கண்டு பிடித்து, அதனை பிரிட்டிஸ் அரசுக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடு பட்டு இருந்த, கேப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பலில் பயணம் செய்த, இயற்கை ஆராய்ச்சியாளர்கள்,அந்தப் பவளத் திட்டுகளை வரை படமாகத் தயாரித்தனர். அதனைக் கண்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்,எப்படி ஆழ்கடல் பகுதியில்,அந்தப் பவளத் திட்டுகள் உருவாகி இருக்க முடியும்? என்ற கேள்விக்கு விளக்கம் தெரியாமல் தலையைப் பிச்சுக் கொண்டனர்.
இந்த நிலையில், இயற்கை ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பருமான,சார்லஸ் லையால் என்பவர்,அந்தப் பவளத் திட்டுகளானது, கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலையின் வாய்ப் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இருபத்தி இரண்டே வயது நிரம்பிய இயற்கை ஆராய்ச்சியாளரான சார்லஸ் டார்வினுக்கு ,பீகிள் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தக் கப்பலில் பயணம் செய்த டார்வின் தென் அமெரிக்கக் கண்டத்தின் கடல் பகுதியில் பயணம் செய்த பொழுது,கப்பலில் இருந்த பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் பவளத் திட்டுகளின் வரை படத்தைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த பொழுது,திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
வட்ட வடிவில் இருந்த அந்தப் பவளத் திட்டுகளானது,ஒரு மூழ்கிக் கொண்டு இருக்கும் எரிமலையைச் சுற்றி உருவான பவளத் திட்டுகள் என்று, டார்வினுக்குத் தோன்றியது. அதாவது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்த ஒரு எரிமலையைச் சுற்றிலும் இருந்த ஆழமற்ற கடல் பகுதியில் பவளங்கள் வளர்ந்து கொண்டு இருந்த நிலையில்,அந்த எரிமலையானது மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கியதால்,பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்ந்ததால்,வட்ட வடிவில் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கின்றன என்று டார்வின் நினைத்தார்.
உடனே அதனைத் தனது பயணக் குறிப்பில் பதிவு செய்து கொண்டார். அதன் பிறகு டார்வின் விலங்கினங்களின் புதை படிவங்களின் சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு பசிபிக் பெருங் கடல் பகுதியைக் கப்பல் வந்தடைந்ததும் டார்வின் ஒரு சில பவளத் திட்டு தீவுகளைப் பார்வையிட்டார். அப்பொழுது டார்வினுக்குத் தான் நினைந்தது சரியே! என்று தோன்றியது. இருப்பினும் இது குறித்து மற்ற ஆராய்ச்சியாளர்கள் என்ன நினைப்பார்களோ என்றும் சிறிது சந்தேகமாகவே இருந்தார்.
அதன் பிறகு பயணம் முடிந்து, டார்வின் ஐரோப்பா திரும்பியதும் தனது வீட்டுக்கு வந்த நண்பரும் ஆராய்ச்சியாளருமான, சார்லஸ் லயலிடன்,பசிபிக் பவளத் திட்டுகள் பற்றிய, தனது 'மூழ்கும் எரிமலை' விளக்கத்தைத் தெரிவித்தும்,லையல்... ஹுரே... என்று வெறிக் கூச்சலுடன் கத்தி...நடனமும் ஆடினார்.
அப்பொழுதே தனது ''கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலையின் வாயில் உருவாகி இருக்கும் பவளத் திட்டுகள்''விளக்கத்தையும் கைவிட்டார்.
அத்துடன் டார்வினை,அவரின் விளக்கத்தைப் புவியியல் கழகத்தில் வாசித்துக் காட்டவும் ஏற்பாடு செய்தார். மேலும் இந்த விளக்கமானது, உன்னை ஒரு விஞ்ஞானியாக உலகுக்கு காட்டும் என்றும் பாராட்டுரை வழங்கினார். புவியியல் கழகத்தில் டார்வின் தனது விளக்கத்தைத் தெரிவித்ததும் பலர் அப்பொழுதே அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாடப் புத்தகத்திலும் டார்வினின் விளக்கம் இடம் பெற்றது.
ஆனாலும் சிலர் அந்த விளக்கத்தில் திருப்தியின்றி இருந்தார்கள்.இன்னும் சிலர் சந்தேகத்துடனும் இருந்தார்கள். ஆனால் டார்வின் அதற்குப் பிறகு, தனது பரிணாமப் புத்தகத்தை எழுதும் முயற்சியில் இறங்கினார்.
அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானம் என்றாலே ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் லூயிஸ் அகாசி என்பவரே எல்லோரின் நினைவுக்கும் வருவார். விலங்கியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனரான லூயிஸ் அகாசி ,கடல் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து, பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டு இருந்தார். நல்ல எழுத்து நடையுடன் வசீகரமாகப் பேசவும் கூடியவர் என்பதால் அவரின் புகழ் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவிலும் பரவி இருந்தது.
குறிப்பாக எமர்சன்,தியோடர் ரூஸ் வெல்ட்.வில்லியம் ஜேம்ஸ் ,தோரூ ஆகியோர் லூயிஸ் அகாசியின் ரசிகர்களாக இருந்தனர்.
குறிப்பாக லூயிஸ் அகாசி இயற்கை குறித்த தனது கட்டுரைகளில், இயற்கையின் பிரமாண்டத்தைக் குறிப்பிட்டு,இதனை கடவுள்தான் படைத்தது இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் டார்வின் தனது ,'இனங்களின் தோற்றம்' என்ற தனது பரிணாம புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் , உயரினங்களானது, லட்சக் கணக்கான ஆண்டு கால கட்டத்தில் சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து, காலப் போக்கில் புதிய உயிரினமாக மாறுவது குறித்துப் பல ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார்.
இதற்கு இயற்கைச் சூழலே காரணம் என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தார்.
டார்வினின் இந்த விளக்கம் உடனே ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.
எனவே லூயிசுக்கு டார்வினின் விளக்கத்தை மறுக்க வேண்டும், அல்லது தனது 'கடவுள் படைப்பு' விளக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
ஆனால் டார்வினின் புகழ் பெருகியதில், லூயிசால் வெளியில் தலையைக் கூட காட்ட முடியாமல் போனது. அத்துடன் அவரின் புகழும் சரியத் தொடங்கியது. மேலும் லூயிஸின் கீழே புரிந்த பேராசிரியரான, ஆஸ் கிரேவும் டார்வினின் புகழ் பாடத் தொடங்கி விட்டது,லூயிஸை வெகுவாகப் பாதித்து விட்டது.
லூயிஸின் புகழ் டார்வினால் சிறுமைப் படுத்தப் பட்டதை, லூயிஸின் மகனான அலக்சாண்டர் அகாசியையும் வெகுவாகப் பாதித்தது.
அலெக்சும் ஒரு இயற்க்கை ஆராய்ச்சியாளராக விளங்கினர். எனவே அவர் தனது தந்தையின் நிந்தனையையும் பொருட் படுத்தாமல்,டார்வினின் பரிணாம விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆனாலும் அவருக்கு டார்வினின் பசிபிக் கடல் பவளத் திட்டுகளின் தோற்றம் குறித்த 'மூழ்கும் எரிமலை' விளக்கத்தில் சந்தேகம் இருந்தது. அந்தப் பவளத் திட்டுகள் பற்றி ஆராய்ச்சி செய்து, டார்வினின் விளக்கத்தைச் சிதறடித்து விட முடியும் என்று நம்பினார்.
இந்த நிலையில் அடுத்தடுத்து நேர்ந்த தந்தையின் மரணமும்,மனைவியின் மரணமும் அலெக்சை இன்னும் வெகுவாகப் பாதித்தது. அப்பொழுது அலெக்சின் நண்பரும், கடல் ஆராய்ச்சியாளருமான, ஜான் முர்ரே என்பவர்,கடல் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொள்ள அலெக்சை அழைத்தார். அலெக்சும் உடனே தயங்காமல் ஒத்துக் கொண்டார்.
ஆனாலும் பயணத்துக்கு தவறான காலத்தை தேர்வு செய்ததால்,அவர்களால் நினைத்த அளவுக்குப் பவளத் திட்டுகள் பற்றி விரிவாக அராய்ச்சி செய்ய முடியாமல் போனது. எனவே மறுபடியும் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டார் . அப்பொழுது பசிபிக் பெருங் கடல் பகுதியில் இருந்த, பல பவளத் திட்டுகளை ஆய்வு செய்தார். அதில் சில பவளத் திட்டுகள், டார்வினின் எரிமலை விளக்கத்திற்கு பொருந்தாமல் இருந்தது.
குறிப்பாக சில பவளத் திட்டுகளானது, நேர் கோட்டுப் பாதையில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு இருந்தது. அப்பொழுது முர்ரே ஒரு விளக்கத்தைத் தெரிவித்தார். அதாவது கடலில் வாழும் மிதவை உயிரினங்கள், லட்சக் கணக்கில் இறக்கும் பொழுது, அதன் உடலில் இருக்கும் சுண்ணாம்புப் பொருட்கள்,கடலில் இருக்கும் கார்பாலிக் அமிலத்தில் கரையும் முன்னே,ஒரு பகுதியானது, கடல் தரையில் படிவதால் கடல் தரையில் இருந்து சுண்ணாம்புத் திட்டுகள் உருவாகி வளரலாம் என்றும் அதன் மேல் பவளங்கள் வளர்ந்து பவளத் திட்டுகள் உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக கடலுக்கு அடியில் இருக்கும் திட்டுகளின் மேல்,கடல் உயிரிகளின் சுண்ணாம்புப் பொருட்கள் படியும் பொழுது,சுண்ணாம்புத் திட்டுகள் வளர்ந்து, அதன் மேல் பவளங்கள் வளர்ந்து, பவளத் திட்டுகள் உருவாகலாம் என்றும் தெரிவித்தார். அலெக்சுக்கு அந்த விளக்கத்தில் நம்பிக்கை ஏற்பட்டது.
பவளத் திட்டுகள் பற்றிய ஆராய்ச்சியில், அலெக்ஸ் முப்பது ஆண்டுகள் செலவிட்டு,300,000 மைல் கடலில் பயணம் செய்து ,பவளத் திட்டுகளை ஆய்வு செய்தார். ஆராய்ச்சிப் பயணம் முடிந்து திரும்ப ஐரோப்பாவை அடைந்ததும்,உடனே டார்வினுக்கு, கடல் தரையில் வளரும் சுண்ணாம்புத் திட்டுகள் மேல், பவளங்கள் வளர்ந்து, பவளத் திட்டுகள் உருவாகலாம் என்று தெரிவித்து இருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு 1881 ஆம் ஆண்டு, பதில் எழுதிய டார்வின்,பவளத் திட்டுகளின் மேல் 600 அடி ஆழத்துக்கு துளையிடும் பொழுது, அதற்கு அடியில் எரிமலைப் பாறைகள் இருந்தால், எனது விளக்கம் சரி,என்றும்,அவ்வாறின்றி பவளத் திட்டுகளுக்கு அடியில், சுண்ணாாம்புத் திட்டுகள் இருந்தால்,உங்களின் விளக்கம் சரி,என்றும் பதில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அந்தக் காலத்தில் துளையிடும் கருவிகளை உருவாக்கும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து இருக்க வில்லை. எனவே பவளத் திட்டுகளின் தோற்றம் குறித்த விளக்கங்கள், உறுதிப் படுத்தப் படாத நிலையிலேயே இருந்தது. அதன் பிறகு அலெக்ஸ் தூங்கும் நிலையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். காலங்களும் மாறின. அதன் பிறகு 1882 ஆம் ஆண்டு,துளையிடும் கருவிகள் உருவாக்கப் பட்ட பிறகு,பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்த ஒரு பவளத் திட்டில் 698 அடி ஆழம் வரைக்கும் துளையிடப் பட்டது. ஆனாலும் பவளத் திட்டுகளே தென்பட்டது. அதன் பிறகு 1898 ஆம் ஆண்டு, ஒரு பவளத் திட்டில் ,1114 அடி வரை துளையிடப் பட்டது.அப்பொழுதும் பவளத் திட்டுகளே தென்பட்டது. இந்த நிலையில், நவீன துளையிடும் கருவிகள் மூலம்,ஒரு பவளப் பாறைத் திட்டில்,4154 அடி வரை துளையிடப் பட்ட பொழுது பவளத் திட்டுகளுக்கு அடியில், எரிமலைப் பாறை தென்பட்டது. அதாவது அடிப்பகுதியில் இருந்த பவளத் திட்டுகளானது, நாலாயிரம் அடி ஆழத்தில் இருந்தது.
அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையை கால மதிப்பீடு செய்த பொழுது,அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையானது.மூன்று கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. ( இதன் மூலம் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது, ஆழம் குறைவான கடல் பகுதியில் இருந்த, அந்தத் திட்டின் மேல் ,பவளங்கள் வளர்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.) அதன் அடிப்படையில் டார்வின் கூறிய, மூழ்கும் எரிமலையின் மேல் வளரும் பவளத் திட்டுகள் விளக்கமே, சரியான விளக்கம், என்று உறுதிப் படுத்தப் பட்டது.
இந்த நிலையில், இன்னும் சில கேள்விகள் எழுகின்றன.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை உயர்வதால், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று நம்பப் படுகிறது.
தற்பொழுது பூமியில் இருக்கும் பனி மொத்தமும் உருகினால் கூட, அதிக பட்சமாகக் கடல் மட்டமானது, இருநூற்றி நாற்பது அடி வரையே உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. ஆனாலும் பூமியின் கடந்த காலத்தில், கடல் மட்டமானது,நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்கூறுகின்றனர்.
இவ்வாறு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் பனியுகம் நிலவியிருந்ததகவும்,அப்பொழுது வட அமெரிக்க்கக் கண்டத்தின் பெரும் பகுதியானது,பல கிலோ மீட்டர் உயரத்திற்குப் பனிப் படலங்களால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அப்பொழுது கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் பிறகு பனி உருகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது 'நானூறு அடி' வரை உயர்ந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்து கேள்விக்கு உரியது என்றாலும் கூட,இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது பவளத் திட்டுகளின் மேல், அறுநூறு முதல் ஆயிரம் அடி வரை துளையிட்ட பொழுதும் கூட,ஆயிரம் அடி ஆழத்தில், பவளத் திட்டின் பகுதிகளே இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அப்படியென்றால் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது, ஆயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
இதே போன்று பவளத் திட்டுகளின் மேல் நாலாயிரம் அடி வரை துளையிட்ட பொழுது கூட ,பவளத் திட்டுகளே இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் கடல் மட்டமானது நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் புலனாகிறது. எனவே ஆயிரம் அடி வரை கடல் மட்டம் தாழ்வாக இருந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
எனது விளக்கம்.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது,அதில் இருந்து பிரியும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருகிறது. அதனாலேயே லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது, ஆயிரம் அடி வரை, தாழ்வாக இருந்திருக்கிறது.
00000
பாகம் இரண்டு.
ஆழம் குறைவான கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய பவளத் திட்டுகளானது,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் எப்படி உருவாகின என்பதற்கு,இயற்கை விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார்.
அதாவது,கடலுக்கு அடியில் இருந்து ஒரு எரிமலையானது மேல் நோக்கி உயரும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றிலும்,ஆழம் குறைவாக கடல் பகுதியில்,பவளத் திட்டுகளானது உருவாகும் பொழுது,அந்த எரிமலையானது மெதுவாக பூமிக்குள் இறங்குவதால்,அந்த எரிமலையைச் சுற்றிலும் உருவான,பவளத் திட்டுகளானது மேல் நோக்கி வளர்ந்ததால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில்,பவளத் திட்டுகள் உருவாகியது என்று விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது கிடைத்து இருக்கும் ஆதாரம் மூலம்,விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.
ஆதாரம்- **************************** வட அமெரிக்கக் கண்டத்தில், டெக்சாஸ் பகுதியில் காணப்படும்,கடல் பஞ்சுகளால் உருவாக்கப் பட்ட,இருபத்தி ஒன்பது கோடி ஆண்டுகள் தொமையான,282 கிலோ மீட்டர் நீளமுள்ள,ராட்சத குதிரை லாட வடிவச் சுண்ணாம்புத் திட்டு.
Horseshoe Atoll[edit] The Horseshoe Atoll is a westward-tilting arcuate chain of reef mounds 282 km long located in the Midland Basin, consisting of 549 m of limestone accumulated in the Pennsylvanian and 335 m in the Permian, with 15 significant reservoirs from 1859 m to 3018 m in depth.[7] The reef complex consists of Upper Pennsylvanian Strawn, Canyon and Cisco limestones, overlain by Lower Permian Wolfcamp sandstones and shales of terrigenous origin prograding northeast to southwest
வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில்,குறிப்பாக டெக்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ பகுதியில்,பெர்மியன் பேசின் என்று அழைக்கப் படும் ஒரு ராட்சத பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்தப் பெர்மியன் பேசின் பகுதியில் இருபத்தி ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகள் காணப் படுகின்றன. இருபத்தி ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமானது பெர்மியன் காலம் என்று அழைக்கப் படுகிறது.
எனவே இந்தப் பேசின் பகுதியானது, 'பெர்மியன் பேசின்' என்று அழைக்கப் படுகிறது.
இந்த பேசின் பகுதியானது நானூற்றி எண்பது கிலோ மீட்டர் நீளமும் ,நானூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.இந்த பேசின் பகுதிக்கு மேற்கிலும் கிழக்கிலும்,இரண்டு சிறிய பேசின்கள் உருவாகி இருக்கின்றன.
மேற்குப் பகுதியில் உள்ள பேசின் பகுதியானது,டெலாவார் பேசின் என்றும் கிழக்குப் பகுதியில் உள்ள பேசின் பகுதியானது,மிட் லான்ட் பேசின் என்றும் அழைக்கப் படுகிறது.
இதில் குறிப்பாக,டெலாவார் பேசினின் விளிம்புப் பகுதியானது,கடல் உயிரினங்களின் சுரப்புகளால் ஆன சுண்ணாம்புத் திட்டால் ஆனது. பவளங்களின் உடலில் சுரக்கும் சுண்ணாம்புப் பெருட்கள் மூலம் பவளத் திட்டுகள் உருவாகுவதைப் போன்றே,கடற்பஞ்சுகளின் உடலில் சுரக்கும் சுண்ணாம்புப் பொருட்களால் சுண்ணாம்புத் திட்டுகள் உருவாகின்றன.
குறிப்பாக அந்த சுண்ணாம்புத் திட்டானது,ஒரு ராட்சத குதிரை லாட வடிவில் இருப்பதுடன், 282 கிலோ மீட்டர் நீளத்துடனும் இருக்கிறது, அந்த சுண்ணாம்புத் திட்டானது,ஜிகாண்டோஸ்பாஞ்சியா என்று அழைக்கப் படும் கடல் பஞ்சால் உருவாக்கப் பட்டு இருக்கிறது.
அத்துடன் அந்த சுண்ணாம்புத் திட்டில்,பென்சில்வேனியன் என்று அழைக்கப் படும் காலகட்டத்தில் உருவான ,549 மீட்டர் உயரமுள்ள சுண்ணாம்புப் படுகையும் காணப் படுகிறது.இதே போன்று,பெர்மியன் காலகட்டத்தில் உருவான 335 மீட்டர் உயரமுள்ள சுண்ணாம்புப் படுகையும் காணப் படுகிறது.
அத்துடன் பிரயோஜோன்,மற்றும் பிராக்கிபோட் உள்பட மற்ற கடல் நுண்ணுயிரிகளின் சுரப்புகளாலும் ஆனது. இந்தச் சுண்ணாம்புத் திட்டில், பிரயோஜோன், பிராக்கிபோட்,கிரினய்ட், கோனோடோன்ட்ஸ்,கேஸ்ட்ரோபோட்,நாட்டிலாய்ட், ஆகிய கடல் உயிரினங்களின் புதை படிவங்களுடன்,கடற் பாசிகளின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. அத்துடன் இந்த சுண்ணாம்புத் திட்டுப் பகுதியில் அமைந்து இருக்கும் 'குடாழுப்'மலையின் மேல் இரண்டாயிரம் அடி தடிமன் உடைய சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. மேலும் இந்த குடாழுப் மலையடிவாரப் பகுதியில் ஒரு உப்புச் சமவெளியும் இருக்கிறது. அத்துடன் டெலவர் பேசினின் தென் பகுதியில் அமைந்து இருக்கும் கண்ணாடி மலையிலும் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
குறிப்பாக அந்த மலையில் கடற்பாசிகள், பிரயோஜோன், பிராக்கிபோட்,கிரினய்ட்,கோனோடோன்ட்ஸ்,கேஸ்ட்ரோபோட், நாட்டிலாய்ட், ஆகிய கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், கடல் உயிரினங்களின் சுரப்புகளால் உருவாக்கப் பட்ட,சுண்ணாம்புத் திட்டு காணப் படுவதற்கு காரணம் என்ன?
இதன் மூலம்,இருபத்தி ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது கடலுக்கு அடியில் அமிழ்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த கடல் பஞ்சுகள் சுரந்த சுண்ணாம்புப் பொருட்களால்,திட்டு உருவாகிய பொழுது,கடல் மட்டமானது மெதுவாக உயர்ந்ததால்,அதற்கேற்ப கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் வளர்ந்து இருக்கிறது. அதன் பிறகு ,வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததால்,அந்தக் கடல் உயிரினங்களானது இறந்து புதை படிவங்களாக உருவாகி இருக்கின்றன.
000000
விண்வெளி அறிவியலில் சில முக்கிய மைல் கற்கள்.
தாலமி-சூரியன் சந்திரன் உள்பட அனைத்து கிரகங்களும் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
கோபர் நிக்கஸ்-பூமி உள்பட அனைத்து கிரகங்களும்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
ஜோகனஸ் கெப்ளர்-சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
சர் ஐசக் நியூட்டன்-சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,ஈர்ப்பு விசையே காரணம்.
சூரியனைக் கிரகங்கள்,சாய்வான கோணத்தில்(inclined orbit ) வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் நகர்ச்சியே காரணம்.
சூரியனைக் கிரகங்கள்,நீள் வட்டப் பாதையில் (elongated orbit ) வலம் வந்து கொண்டு இருப்பதற்கும்,சூரியனின் நகர்ச்சியே காரணம். -க.பொன்முடி-
0000
கோள்களின் சுற்றுப் பாதைக்கு எனது விளக்கங்கள்.
சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும்,சுற்றுப் பாதையானது,சூரியன் செல்லும் திசைக்கு அறுபது டிகிரி சாய்வாக இருப்பதற்குக் காரணம் என்ன? பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும்,நிலவின் சுற்றுப் பாதையானது,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு, ஐந்து டிகிரி சாய்வாக இருப்பதற்குக் காரணம் என்ன?
சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும்,சுற்றுப் பாதையானது,சூரியன் செல்லும் திசைக்கு அறுபது டிகிரி சாய்வாக இருப்பதற்கும்,சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில்.வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், சூரியனின் நகர்ச்சியே காரணம்.
பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும்,நிலவின் சுற்றுப் பாதையானது,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு, ஐந்து டிகிரி சாய்வாக இருப்பதற்கு,சூரியனுடனான,பூமியின் நகர்ச்சியே காரணம்.
00000
புளூட்டோவின் சாய்வான சுற்றுப் பாதைக்கு நாசாவின் விளக்கம் என்ன?
சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும்,தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில்,புளூட்டோ வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, நெப்டியூன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பாதிப்பே காரணம், என்று நாசாவின் இணைய தளத்தில்,தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
The outermost dwarf planets like Pluto are in inclined orbits, but these have been modified by Neptune's gravity and are not embedded deep inside the Sun's gravitational field.
00000
நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்களும்,இடை நிலை நட்சத்திரங்களும்.
இரண்டு சந்திரோதயங்களை நான் இன்றுதான் கண்டேன்...நான் அவள் கண்களைச் சொல்லுகிறேன்...என்று மண்வாசனை படத்தில்,நிழல்கள் ரவி ,ரேவதியின் கண்களை வர்ணிப்பார். உண்மையிலேயே இரண்டு சந்திரோதயங்கள் நிகழும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
பூமியில் இருந்து இருநூறு ஒளியாண்டு தொலைவில், ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு இருக்கும் இரட்டை நட்சத்திரத்தை, கெப்ளர்-பி என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு கிரகம்,சூரியனில் இருந்து வெள்ளி கிரகம் இருக்கும் தொலைவில் இருந்தபடி, 229 நாளுக்கு ஒரு முறை, வலம் வந்து கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அந்த இரட்டை நட்சத்திரங்களானது,41 நாளுக்கு ஒரு முறை ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, அந்த கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும்,இரட்டை நட்சத்திரத்தில்,பெரிய நட்சத்திரமானது,சூரியனின் நிறையில்,0.68- சதவீத அளவிலும்,சிறிய நட்சத்திரமானது,சூரியனின் நிறையில்,0.20- சதவீத அளவிலும்,இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த கிரக அமைப்பானது, கிரகங்களின் தோற்றம் குறித்த ,தூசித் தட்டுக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. எப்படிஎன்றால்,தூசித் தட்டுக் கொள்கையின் படி, கிரகங்கள் எல்லாம், விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால், கெப்ளர்-16 -பி கிரகமோ,இரண்டு நட்சத்திரங்களையும், ஒரே சேர வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த கிரக அமைப்பு எப்படி உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில்,பூமியில் இருந்து 36 ஒளியாண்டு தொலைவில் ,மீன ராசி நட்சத்திர மண்டலத்தில்,இருக்கும்,HD 3651 என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு நட்சத்திரத்தை,சூரியனில் இருந்து , புதன் கிரகம் இருக்கும் தொலைவில் இருந்தபடி, 62 நாளுக்கு ஒரு முறை,ஒரு கிரகம், வலம் வந்து கொண்டு இருப்பதை, ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருந்தனர்.
இந்த நிலையில்,அந்த நட்சத்திரத்தை,சூரியனில் இருந்து நெப்டியூன் கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,பதினாறு மடங்கு தொலைவில் இருந்தபடி,இடை நிலை நட்சத்திரம் என்று அழைக்கப் படும், ஒரு பழுப்பு நட்சத்திரம் ஒன்று,வலம் வந்து கொண்டு இருப்பதையும், விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, அந்தப் பழுப்பு நட்சத்திரமானது,வியாழன் கிரகத்தை விட இருபது முதல் அறுபது மடங்கு வரை ,நிறையுடையதாக இருக்கலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.
அத்துடன் அதன் வெப்ப நிலையானது,ஐநூறு முதல் அறுநூறு டிகிரி சென்டி கிரேட் வரை இருக்கலாம் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த பழுப்பு நட்சத்திரத்தைக் கண்டு பிடித்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான மார்கஸ் மக்ராயர்,நூற்றி எழுபது நட்சத்திரங்களை கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்ட நிலையில்,அவற்றில் பல நட்சத்திரங்களை,இது போன்ற,ஒன்று அல்லது பல இடை நிலை நட்சத்திரங்களும், வலம் வந்து கொண்டு இருப்பதாகவும்,தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம், கிரகங்களானது,எளிய அமைப்பான, நமது சூரியன் போன்ற தனி நட்சத்திரத்திற்கு அருகில் மட்டுமின்றி, மிகவும் சிக்கலான இயக்கமுள்ள சூழலிலும் உருவாகக் கூடும், என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் டாக்டர் மார்கஸ் மக்ராயர், தெரிவித்து இருக்கிறார்.
முக்கியமாகக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் இரண்டு நட்சத்திரங்களை,ஒயிட் டார்ப் என்று அழைக்கப் படும்,வெண்குறு நட்சத்திரங்களும்,வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும்,மார்கஸ் மக்ராயர், தெரிவித்து இருக்கிறார்.
முக்கியமாக, நிலா அளவுள்ள ஒரு வைரக் கோளப் படிகம் ஒன்று, ஒரு வெண் குறு நட்சத்திரத்தின் மையத்தில் உருவாகி இருந்ததை, பிரிட்டிஸ் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,சூரியனை விடப் பல மடங்கு அதிக வெப்பமான, கதிர் வீச்சை ஒளி வீசும்,ஒரு துடிப்பு நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக,மூன்று சிறிய கிரகங்கள், வலம் வந்து கொண்டு இருப்பதையும்,அலக்சாண்டர் வோல்சான் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார்.
அதி வெப்ப நட்சத்திரத்துக்கு அருகில், ஆவியாகாமல்,வலம் வந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,அந்தக் கிரகங்களானது, வைரக் கிரகங்களாக இருக்க வேண்டும் என்று டாக்டர்,மார்க் குச்சனர் என்ற விஞ்ஞானி விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில்,ஒரு நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும், ஒரு கிரகத்தில் இருந்து,வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதையும், விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, பூமியில் இருந்து 150 ஒளி வருட தூரத்தில் இருக்கும் ஹெச் டி 209458 என்ற நட்சத்திரத்தை ‘’ஆசிரிஸ்’’என்று அழைக்கப் படும் ஒரு கிரகம் ,ஒரு ராட்சத வால் நட்சத்திரம் போல வலம் வந்து கொண்டு இருக்கிறது. பூமியை விட 220 மடங்கு பெரியதாக உள்ள அந்த வாயுக் கோள கிரகம் அதன் நட்சத்திரத்தை வெறும் 40 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் மூன்றரை நாளுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது.
சூரியனை பூமி பதினைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்தில் 365 நாளுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது. இதை விட ஐம்பது மடங்கு குறைவான தூரத்தில் அந்த வால் நட்சத்திரக் கிரகம் அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
சூரியனில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வியாழன் கிரகம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி முடிக்கிறது. ஆசிரிஸ் கிரகம் அதன் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருப்பதால் ,அந்த கிரகத்தின் வாயு மண்டலம் 1395 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கிறது.(பூமி 250 கெல்வின் ) . அந்த கிரகத்தின் வாயு மண்டலம் வெப்பத்தால் விரிவடைந்து அதிலிருந்து இரண்டு லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள வால் பகுதி உருவாகி இருக்கிறது.
அதிலிருந்து, வினாடிக்கு பத்தாயிரம் டன் ஹைட்ரஜன் வாயுவும் சோடியம் போன்ற கனமான உலோக வாயுக்களும் விண்வெளியில் விசிறியடிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது.
விரைவில் இந்த வால் நட்சத்திரக் கிரகம் 10 பூமி எடையுள்ள பாறைக் குழம்புக் கோளமாக மாறி விடும் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது.
ஆசிரிஸ் கிரகம், அளவுக்கு அதிகமாக விரிவடைந்து இருப்பதற்கு அது நட்சத்திரத்துக்கு மிக அருகில் வலம் வருவது மட்டும் காரணமல்ல என்றும் அதன் மையத்தில் வெப்பம் உருவாகும் நிகழ்வே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
நட்சத்திரத்தின் மையப் பகுதியில்தான் அணுக் கரு வினை மூலம் வெப்பம் உற்பத்தி செய்யப் படுகிறது. எனவே பெரிய நட்சத்திரங்களால் ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களானது, வாயுக்களை இழந்து ,இறுதியில் கிரகங்களாக உருவாகுகின்றன என்பது மேற்கண்ட கிரக அமைப்புகள் மூலம் தெளிவாகிறது.
000000
கிரகங்கள் ஏன் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன?
நிலவானது, சூரியனை, பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு நிலவானது, ஏன் பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது, என்பதற்கு இது வரை விளக்கம் கூறப் படவில்லை.
இவ்வாறு நிலவானது, பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நிலவானது பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமியானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,விண்வெளியில் வினாடிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனைத் தொடர்ந்து கொண்டு இருப்பதே காரணம்.
அதாவது விண்வெளியில் சூரியனானது, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனை, மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை ,சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் திசைக்கு செங்குத்து திசையில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,கிரகங்கள் எல்லாம் சூரியனை தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.
மாறாக அறுபத்தி இரண்டு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளமானது, கிரகணத் தளம் என்று அழைக்கப் படுகிறது.
ஏனென்றால்,இவ்வாறு கிரகங்கள் ஒரே தளத்தில் வலம் வருவதால்தான், சில உள்வட்டக் கிரகங்களானது, சூரியனுக்கும் வெளி வட்டக் கிரகங்களுக்கும் இடையில் வலம் வந்து, கிரகணங்கள் ஏற்படக் காரணமாகிறது. ஆனாலும் எல்லாக் கிரகங்களும், இந்தப் பொது அட்சிலேயே வலம் வராமல், ஓரிரு டிகிரி விலகிச் சென்று வலம் வருகின்றன.
உதாரணமாக,சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகமானது,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வாக,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதே போன்று,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் புளூட்டோ கிரகமானது,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து பதினேழு டிகிரி சாய்வாகச் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. புளுட்டோவுக்கும் அப்பால் இருக்கும் ஏரிஸ் என்ற குறுங்கிரகமானது,இந்தப் பொதுத் தளத்தில் இருந்து நாற்பத்தி நான்கு டிகிரி சாய்வான தளத்தில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு கிரகங்கள் சூரியனை சாய்வான தளத்தில் வலம் வருவதற்கு, விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருப்பதே காரணம்.
அதாவது கிரகங்கள் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.
எனவே கிரகங்களானது, சூரியனை விரட்டிச் சென்று வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவதால்,கிரகங்களின் சுற்றுத் தளமானது சாய்வாக அமைந்து விடுகிறது. இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,
அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்.
அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாரிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும்.
இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது.
இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும்.
இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது.
00000
மண்ணிலிருந்து ...விண்ணுக்கு...
இந்தப் பூமியானது, விண்வெளியில் வினாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,நம்மால் அதை உணர முடிவதில்லை. எனவே, இந்தப் பூமியானது, அசையாமல் நிலையாக இருக்கிறது என்று, ஆதி காலத்தில் அரிஸ்டாட்டில் முதலானோர் நினைத்ததில் வியப்பேதும் இல்லை.
அத்துடன், காலையில் சூரியன் கிழக்கு திசையில் உதயமாகி,வானில் மேல் நோக்கி உயர்ந்து,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,மாலையில் கீழ் வானில் மறைகிறது.
அதன் அடிப்படையில்,பூமி நிலையாக இருப்பதாகவும்,சூரியன்தான் பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் நம்பப் பட்டது. அதே போன்று,கிரகங்களும் கூட சூரியனைப் போலவே,இரவில், கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,சூரியன்,நிலா உள்பட எல்லா கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்றும் நம்பப் பட்டது.
மத நூல்களிலும் இதே கருத்து இடம் பெற்றது.
இந்த நிலையில், பொருள்களின் இயக்கம் பற்றி அரிஸ்டாட்டில் யோசித்தார்.
பொருள்கள் நிலையாக அசைவின்றி இருப்பதுதான் இயல்பான நிலை, என்றும், அதனை அசைக்கும் பொழுது,பொருள்கள் சிறிது நகர்ந்து சென்ற பிறகு, மறுபடியும் ஓய்வு நிலையை, அதாவது இயல்பு நிலையை அடைகிறது.என்றும் அரிஸ்டாட்டில் யோசித்தார்.
இதே போன்று,ஒரு காலத்தில் சூரியனும் நிலாவும் கூட அசைவின்றி இருந்த பிறகு, கடவுள் அதனை முடுக்கிய பிறகு, எல்லாம் கடவுளின் சித்தப் படி, முன் கூட்டியே திட்டமிட்ட படி,கட்சிதமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் நம்பப் பட்டது.
பூமியையும் அதில் மனிதனையும் கடவுள் படைத்ததாக நம்பப் பட்டதால், பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப் பட்டது. காலப் போக்கில், விவசாயத்தில் நல்ல விளைச்சல் ஏற்படுவதற்கும் இயற்கைக்கும் இருக்கும் தொடர்பு அறியப் பட்டது.பருவ காலங்கள் சீராக மாறிவருவது அறியப் பட்டது. இதன் தொடர்ச்சியாக, மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுக்கும், கிரகங்களின் இடமாற்றதுக்கும், தொடர்பு இருப்பதாக நம்பப் பட்டது.
எனவே, கிரகங்களின் இயக்கத்தைக் கணிப்பதில் அதிக ஆர்வம் எழுந்தது.குறிப்பாக இரவில் பின் புல நட்சத்திரங்களுக்கு இடையில் கிரகங்கள் நகர்ந்து கொண்டு இருப்பது கவனிக்கப் பட்டது. ஆனாலும் பூமியை மையமாகக் கொண்டு சூரியன் ,சந்திரன் மற்றும் கிரகங்கள் சுற்றி வரும் கொள்கையின் அடிப்படையில், கிரகங்களின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் இருந்தது.
இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய கோப்பர் நிகஸ் என்ற விஞ்ஞானி ,பூமி உள்பட் எல்லாக் கிரகங்களும்,சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார். ஆனால் இந்தக் கருத்தானது மதக் கருத்துக்களுக்கு முரணாக இருந்ததால்,வெளியிட அஞ்சினார்.ஆனாலும் தனது விளக்கத்தை புத்தகமாக வெளியிட்டார். ஆனாலும், அந்தக் காலத்தில் அவ்வளவு பரவலாகப் பேசப் படாத இலத்தீன் மொழியில் அந்த நூல் இருந்ததால்,அவரின் விளக்கமானது பொது மக்களிடையே அவ்வளவாகப் பரவவில்லை.
இருந்தாலும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 'டைகோ பிராகே' என்பவர்,கோப்பர் நிகசின் கருத்தை பொய்யென நிரூபிப்பதற்காக ,அரசரிடம் உதவி பெற்று,ஒரு தேவாலயத்தின் கோபுரத்தின் மேல் இருந்தபடி தினமும் இரவில்,பின்புல நட்சத்திரங்களுக்கு இடையில் நகர்ந்து செல்லும் கிரகங்களின் இடங்களைக் குறித்துப் பதிவேடுகள் தயார் செய்தார்.
அப்பொழுது,அவர், செவ்வாய் கிரகமானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதன் வேகம் சிறிது குறைவதும்,பின்னர் நிலையாக நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த பிறகு, மறுபடியும் மேற்கு திசையை நோக்கி நகர்வதை அறிந்தார்.
இவ்வாறு, செவ்வாய்க் கிரகமானது கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது, சிறிது தயங்கி நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையில் நகர்ந்த பின்னர், பழையபடி மேற்கு திசையை நோக்கி நகர்வதற்கு காரணம் என்ன என்று டைகோ பிராகே யோசித்தார். ஆனால் அந்த நிகழ்வுக்கு அவரால் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவரிடம் ,ஜோகன்னஸ் கெப்ளர் என்ற இளைஞர் உதவியாளர் பணிக்கு சேர்ந்தார்.
கெப்ளர்,கோப்பர் நிகசின் சூரிய மையக் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்டவர். டைகோ பிராகே திடீரென்று இறந்ததும் அவர் தயாரித்த ஆவணங்கள் எல்லாம் கெப்ளரின் கைக்கு வந்தது.
அதனை ஆய்வு செய்த கெப்ளர்,கோள்கள் எல்லாம் சூரியனை,ஒரு முனையில் குவியமாகக் கொண்டு , நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார். அதற்கு முன்பு எல்லோரும், கோள்கள் எல்லாம், வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பினார்கள்.
அவ்வாறு கிரகங்கள் சூரியனை ,வெவ்வேறு நீள் வட்டப் பாதையில், வலம் வரும் பொழுது,குறிப்பாக நீள் வட்டப் பாதையில், வளையும் இடத்தில்,பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று முந்துவதால்,பூமியில் இருந்து பார்ப்பதற்கு, செவ்வாய் கிரகமானது முதலில் முந்துவதைப் போன்று சென்ற பிறகு, பின்தங்குவதை அறிந்து கொண்டார். அத்துடன், கிரகங்கள் எல்லாம்,சூரியனை நெருங்கும் பொழுது வேகமாகவும்,சூரியனை விட்டு விலகி தொலைவுக்கு சென்ற பிறகு மெதுவாகவும் செல்வதையும்,கெப்ளர் அறிந்தார். ஆனால் ஏன் அவ்வாறு கிரகங்கள் சூரியனைச் சுற்றுகிறது, என்று கெப்ளர் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில், 'கலிலியோ' தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்தார்.அப்பொழுது அவர் நிலவைப் போலவே,வெள்ளி கிரகத்திற்கும் பிறைகள் தோன்றி வளர்வதை அறிந்தார்.
இதன் அடிப்படையில், வெள்ளிக் கிரகமானது,சூரியனை மையமாகக் கொண்டு வலம் வந்து கொண்டு இருப்பதைப் புரிந்து கொண்டார்.அதே போன்று எல்லாக் கிரகங்களும், சூரியனையே வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டார்.
இந்தக் கருத்தைக் கூறியதற்காக, அவர் மதக் கோட்பாட்டாளர்களால் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டு,இறுதிக் காலத்தில் மருத்துவ உதவிகள் கூட மறுக்கப் பட்ட நிலையில், பார்வையிழந்த நிலையில் உயிரிழந்தார்.
கலிலியோ மேலும் பல சோதனைகளைச் செய்து அரிஸ்டாடிலின் கருத்தைத் தகர்த்தார்.
குறிப்பாக,அரிஸ்டாட்டில்,அதிக எடையுள்ள பொருள் வேகமாகவும்,குறைந்த எடையுள்ள பொருள்கள் மெதுவாகவும் விழும் என்று கூறியிருந்தார். ஆனால் கலிலியோ ஒரு சாய்வான மரப் பலகையில்,வெவ்வேறு திடமுள்ள கோளங்களை உருளச் செய்து, அந்தக் கோளங்கள் ஒரே நேரத்தில் தரையை வந்தடைவதை எடுத்துக் காட்டினார்.
அதன் அடிப்படையில், எல்லாப் பொருள்களும் ஒரே வேகத்தில்தான், பூமியை வந்தடையும் என்பதை எடுத்துக் காட்டினார். ஆனால் ஏன் அவ்வாறு பொருள்கள் பூமியை நோக்கி நகர்கின்றன என்று அவர் யோசிக்க வில்லை.
இந்த நிலையில், நியூட்டன், பொருளின் இயல்பு நிலை பற்றி,அரிஸ்டாட்டில் கூறியதற்கு முற்றிலும் முரணாக விளக்கத்தைக் கூறினார்.
உதாரணமாக, ஒரு இடத்தில் இருக்கும் பந்தை ஒருவர் தள்ளி விட்டால் அந்தப் பந்தானது நகர்ந்து சென்ற பிறகு இறுதியில் ஒரு இடத்தில் நின்று விடும்.அதாவது இயல்பு நிலையை அடையும்.என்று அரிஸ்டாட்டில் கருதினார்.
ஆனால் நியூட்டன் அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாறாக,இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பொருளின் மேல் புற விசை ஒன்று செயல்படாத வரையில் அந்தப் பொருளானது தொடர்ந்து அதே வேகத்தில்,அதே திசையில் சென்று கொண்டு இருக்கும் என்று கூறினார். மற்றபடி ஓடும் பந்தை நிறுத்துவது, உராய்வு போன்ற தடைதான் காரணம் என்பது நியூ ட்டனின் விளக்கம்.
இந்த நிலையில்,ஐசக் நியூட்டன் வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார். அப்பொழுது ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னால் மறைந்த பிறகு மறபடியும் வானில் எழுந்து நகர்ந்ததைக் கண்டார்.
அதன் அடிப்படையில் சூரியனுக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதைப் புரிந்து கொண்டார். அதே போன்று பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதையும் நியூட்டன் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையில், கிரகங்கள் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும், ஈர்ப்பு சக்தியே காரணம் என்பதை நியூட்டன் அறிந்து கொண்டார்.
எனவே, ஏன் நிலா பூமியின் மேல் விழ வில்லை என்று நியூட்டன் யோசித்தார். அப்பொழுது,ஒரு மலையின் மேல் இருக்கும் ஒரு பீரங்கியில் இருந்து வேகமாகச் செல்லும் குண்டானது அருகில் விழும்,ஆனால் அந்தக் குண்டின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க, அந்தக் குண்டானது அதிக தொலைவுக்கு பயணம் செய்து விழும்.
இந்த நிலையில்,மலையின் உயரமும், குண்டின் வேகமும் மென்மேலும் அதிகரிக்கும் பொழுது,ஒரு கட்டத்தில் அந்தக் குண்டானது,பூமியில் விழாமல்,பூமியை சுற்ற ஆரம்பித்து விடும்,என்றும் அதே போலதான் நிலவும் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.
அதன் அடிப்படையில்,நேராகச் செல்லும் நிலாவை, பூமியின் ஈர்ப்பு வியையானது, தொடர்ந்து இழுப்பதால்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது, என்று விளக்கம் கூறினார்.
இந்த நிலையில், கிரகங்களின் இடங்களை, ஓரளவு துல்லியமாகக் கணிக்க முடிந்தது,குறிப்பாக ஒரு கிரகம் எந்த நேரத்தில் எங்கு இருக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது.
எனவே கிரகங்கள் ஏன் சூரியனை வட்டப் பாதையில் சுற்றாமல், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் காரணமாகக் கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறினார்.
ஆனாலும் புதன் கிரகத்தின் இயக்கத்தை கணிப்பதில் சிரமம் இருந்தது.அதாவது புதன் கிரகமானது எப்பொழுது எங்கே இருக்கும் என்று கணித்துச் சொல்ல முடியாமல் இருந்தது.
அத்துடன் புதன் கிரகமானது, ஒவ்வொரு முறையும்,சூரியனைச் சுற்றி வந்த பிறகு,புறப்பட்ட இடத்திற்கு வராமல் சிறிது இடம் மாறியது.
அதாவது,புதன் கிரகமானது சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் மாறியது.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், புதன் கிரகமானது சூரியனை ஒரு பூவின் இதழைப் போன்று சுற்றிக் கொண்டு இருந்தது.
அதாவது புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே சூரியனைச் சுற்றிக் கொண்டு இருந்தது. அத்துடன் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையும், எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இவ்வாறு,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீளமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
அதே போன்று,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ஏன் சூரியனைச் சுற்றுகிறது, என்ற கேள்விக்கும் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை.
இந்தப் புதிருக்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தை கூறினார்.
அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக,ஈர்ப்பு என்பது விண்வெளியில் சூரியன் போன்ற பொருள்களின் நிறையால்,விண்வெளியானது வளைக்கப் படுகிறது.அதனால்,சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகிறது. அந்தப் பள்ளத்தைக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது வளைக்க படுவதால்,சூரியனைக் கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன,என்று ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தை கூறினார்.
உதாரணமாக ஒரு பெரிய ரப்பர் மெத்தையின் மேல் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அந்த ரப்பர் மெத்தையில் ஒரு பெரிய பள்ளம் உருவாகும். இந்த நிலையில் அந்த பள்ளத்தில், சில கோலிக் குண்டுகளை உருட்டி விட்டால் அந்தக் கோலிக் குண்டுகளானது,அந்தப் பெரிய இரும்புக் குண்டை வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வராமல், சிறிது இடம் மாறி வருவதைப் போன்று, கிரகங்களும் இயங்குகின்றன, என்று ஐன்ஸ்டீனின் கருத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறது.
ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு.
ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று உண்மையில்,சூரியனுக்கு அருகில் விண்வெளியானது வளைக்கப் பட்டு இருக்கிறதா என்பதை எப்படி அறிய முடியும் என்ற கேள்வி எழுந்தது. உண்மையில் ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் பட்டு,சூரியனைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருந்தால்,சூரியனுக்குப் பின்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளியானது,அந்தப் பள்ளத்தைக் கடந்து வரும் பொழுது வளைந்து வரும்,எனவே சூரியனுக்குப் பின்னால் ஒரு நட்சத்திரம் இருந்தாலும் கூட, அந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்று விளக்கம் கூறப் பட்டது.
பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது. ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது.
இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது.
உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன? என்ற கேள்விக்கு, நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார்.
எனது விளக்கம்.
பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையானது காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு மாற வேண்டும்.
ஏனென்றால் கிரகங்களின் நிலையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு இடம் மாறுகிறது.
ஆனால் அவ்வாறில்லாமல், பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. எனவே,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்று நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.
மாறாக, சூரியனின் முன் நோக்கிய நகர்வே,கிரகங்களின் நீள்வட்டப் பாதைக்குக் காரணம். எப்படி என்றால், ஒரு கிரகமானது சூரியனை சுற்றிவிட்டுத் திரும்பும் பொழுது,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.
எனவே,சூரியனைச் சுற்றி விட்டு நகர்ந்த கிரகமானது,மறுபடியும் சூரியனை நெருங்க வேண்டும் என்றால்,அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. இதன் காரணமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது, நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது.
இந்த நிலையில், சூரியனானது விண்வெளியின் நேர்கோட்டுப் பாதையில் பயணம் செய்யாமல்,பால்வீதி நட்சத்திர மண்டலத்தைச் சுற்றி சற்று வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. அத்துடன் வியாழனின் ஈர்ப்பு விசையால் சிறிய அளவில் வட்டமிட்டபடியும் நகர்கிறது.
இவ்வாறு, சூரியன் விண்வெளியின் வளைவான பாதையில்,வட்டமிட்டபடி, பயணம் செய்து கொண்டு இருப்பதால்,சூரியனைச் சுற்றும் கிரங்களானது.சூரியனை நெருங்கும் புள்ளியும் ஒவ்வொரு சுற்றுக்கும் இடம் மாறுகிறது.
00000
கிரகங்களின் இயக்கம்- அரிஸ்டாட்டில் முதல் பொன்முடி வரை.
பால் வீதி நட்சத்திர மண்டலம் என்று அழைக்கப் படும்,நட்சத்திரங்களால் ஆன சுழல் தட்டின் ஓரப் பகுதியில் இருந்தவாறு,சூரியன்,அந்த நட்சத்திரத் தட்டின் விளிம்புப் பகுதிக்கு இணையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.
சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசையை நோக்கி,சூரியனின் வட துருவப் பகுதி இருக்கிறது. இந்த நிலையில்,கிரகங்கள் எல்லாம்,சூரியனின் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் இடைப் பட்ட பகுதியில்,இருக்கும்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
குறிப்பாகக் கிரகங்கள் எல்லாம்,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வான தளத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இந்தத் தளமானது கிரகணத் தளம் என்று அழைக்கப் படுகிறது. ஏனென்றால்,இவ்வாறு கிரகங்கள் ஒரே தளத்தில் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதால்,சூரியனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் இடையில்,உள் வட்டக் கிரகங்கள் வரும் பொழுது,கிரகணங்கள் ஏற்படுகின்றன.
ஆனாலும், பொதுத் தளமாக இருக்கும் இந்தக் கிரகணத் தளத்தில் இருந்து ஓரிரு டிகிரி விலகியே, கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஏழு டிகிரி சாய்வான தளத்தில்,புதன் கிரகமானது,சூரியனை,நீள் வட்டப் பாதையில், வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அத்துடன்,புதன் கிரகமானது,சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது.இதே போன்று எல்லாக் கிரகங்களும்,சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் பெயர்கிறது.
இந்த நிலையில்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,இருந்தபடி,அதாவது,சூரியனில் இருந்து,பூமி இருக்கும் தொலைவைக் காட்டிலும்,முப்பது மடங்கு தொலைவில் இருந்த படி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,புளூட்டோவின்,சுற்றுப் பாதையானது,சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வரும் தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில்,இருப்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விக்கு,எனது விரிவான பதிலை இந்தக் கட்டுரையில்,தெரிவித்து இருக்கிறேன். -------------------------- அரிஸ்ட்டாட்டில் காலத்தில் கிரகங்கள் எல்லாம் பூமியை வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. அதன் பின்னர், போலந்து நாட்டைச் சேர்ந்த, வானியலாளர் நிகோலஸ் கோபர் நிகஸ் ,கிரகங்கள் எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். அதன் பின்னர்,ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, சேர்ந்த வானியலாளர், ஜோகனஸ் கெப்ளர் ,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று கூறினார்.
அதன் பின்னர்,இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியூட்டன்,கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரியனின் ஈர்ப்பு விசையே காரணம் என்று கூறினார்.
இந்த நிலையில்,புதன் கிரகமானது ஒவ்வொரு சுற்றுக்கும் சூரியனை நெருங்கும் புள்ளியானது இடம் மாறியது. புதன் கிரகத்தின் இந்த வினோத இயக்கத்துக்கு நியூட்டனால் விளக்கம் கூற இயல வில்லை. நியூட்டனுக்குப் பிறகு,இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டீன், புதன் கிரகத்தின் இயக்கத்துக்கு ஒரு விளக்கத்தைக் கூறினார்.அதாவது ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசையே அல்ல ,மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு,அதாவது சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் படுகிறது,அதனால் சூரியனைச் சுற்றி ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்லும் கிரகங்களின் பாதை வளைக்கப் படுவதால்,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கம் கூறினார்.
ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு.
ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத் தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. மேலும், ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது.
இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும்.
இந்த நிலையில்,தற்பொழுது, நிலவானது,ஏன் ,சூரியனைப் பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ,ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அதே போன்று,புளூட்டோவானது,ஏன்,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
எனது விளக்கம்.
விண்வெளியில்,சூரியன்,கிடை மட்டமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் ''இடுப்புப்'' பகுதியை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருப்பதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக அமைகிறது.இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதையானது சாய்வாக மாறுவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையும்,நீள் வட்டமாக மாறுகிறது.
இதே போன்று,விண்வெளியில், சூரியனை சாய்வான தளத்தில்,நீள் வட்டப் பாதையில்,பாதையில் வலம் வந்து கொண்டே ,கிடை மட்டமாகவும், நகர்ந்து கொண்டு இருக்கும் பூமியை,நிலவும்,வலம் வரும் பொழுது,சூரியனுடனான பூமியின் நகர்ச்சியால்,பூமியைச் சுற்றும்,நிலவின் பாதையும்,நீள் வட்டமாகவும்,சாய்வான தளத்திலும் அமைகிறது.
இதே போன்று,புளூட்டோவும்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,இருந்த படி,வலம் வந்து கொண்டு இருப்பதால்,அதன் சுற்றுப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதுடன்,அதன் சுற்றுத் தளமும் ,மற்ற கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து அதிகம் விலகி இருக்கிறது.
இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,
அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும். அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாரிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும்.
இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது. இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும். இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது.
000000
டார்வின் ஏமாந்தார்.....
கடல் உயிரினங்களால்,எரிமலைத் தீவுகளைச் சுற்றிலும், உருவாக்கிய திட்டுகளானது, நிலத்தின் மேல் பல இடங்களில் காணப் படுகிறது.இந்தத் திட்டுகளானது, எரிமலைகள் பூமிக்கு அடியில் இறங்குவதால் உருவானது என்ற, விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் விளக்கத்திற்கு,முற்றிலும் முரணாக இருக்கிறது.
00000
விஞ்ஞானிகளுக்கு கிரகங்களின் சுற்றுப் பாதைக்கு காரணம் தெரிய வில்லை
விஞ்ஞானிகளுக்கு, கிரகங்களின் சுற்றுப் பாதைக்கு காரணம் தெரிய வில்லை.
0000
0000
ஈர்ப்புவிசை+கிரகங்களின் சுற்றுப்பாதைக்கு ஐன்ஸ்டீனின் விளக்கம்தவறு.
ஈர்ப்பு பற்றிய ஆராய்ச்சி. அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே, பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,நிலா சூரியன் மற்றும் கிரகங்கள் எல்லாம் ,பூமியை மையமாகக் கொண்டே வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று நம்பப் பட்டு வந்தது.
ஆனால், இந்தக் கருத்தின் அடிப்படையில்,கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாகக் கணிக்க முடிய வில்லை.
இந்த நிலையில்,போலந்து நாட்டைச் சேர்ந்த ஆராயய்சியாளரான ,நிகோலஸ் கோபர் நிகஸ்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதைப் புரிந்து கொண்டார்.
ஆனால், இந்தக் கருத்தானது மதக் கோட்பாடுகளுக்கு மாறாக இருந்ததால்,அதிகம் பிரபலமில்லாத மொழியில் எழுதினார். கோபர் நிகசின் கருத்தை முறியடித்து,பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்பதை நிரூபிப்பதற்காக, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகோ பிராகே என்ற ஆராய்ச்சியாளர்,ஒவ்வொரு நாள் இரவிலும்,நட்சத்திரங்களுக்கு இடையிலான கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார்.எதிர் பாராத நிலையில்,டைகோ பிராகே இறந்து விடவே,அந்தப் பதிவுகள் அனைத்தும் அவரின் உதவியாளாரான ,ஜோகனஸ் கெப்ளர் கைக்கு வந்தது.
அந்தப் பதிவுகளைக் கவனமாக ஆய்வு செய்த கெப்ளர்,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார்.
குறிப்பாக அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு முனைப் பகுதியின் மையத்தில் சூரியன் இருப்பதையும் அறிந்தார். அத்துடன்,கிரகங்களானது ,சூரியனுக்கு அருகில் வரும் பொழுது,வேகமாகவும்,சூரியனில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல மெதுவாகவும் ,இயங்குவதை அறிந்தார்.
ஆனால் ஏன் அவ்வாறு கிரகங்கள் சூரியனை சுற்றிக் கொண்டு இருக்கின்றன என்று அவர் அதிகம் யோசிக்க வில்லை.
அதனால் சூரியனுக்கு காந்த சக்தி போன்று ஒரு சக்தி இருக்கிறது என்று கருதினார். இந்த நிலையில்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ,கணிதப் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டு இருந்த ஐசக் நியூட்டன்,கோள்களின் இயக்கத்துக்கு கணித சமன்பாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்பொழுது ,ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னல் மறைந்த பிறகு,மறுபடியும் வானில் எழுவதை நியூட்டன் கண்டார். அதன் அடிப்படையில்,சூரியனுக்கு ஈர்க்கும் சக்தி இருப்பதைப் புரிந்து கொண்டார். அத்துடன் அந்த சக்தியானது,நேராகச் சென்ற வால் நட்சத்திரத்தின் பாதையை வளைத்து இருப்பதை நியூட்டன் புரிந்து கொண்டார்.
அத்துடன் அந்த ஈர்ப்பு சக்தியானது,ஆப்பிளை பூமி இழுக்கும் அதே சக்திதான் என்றும் நியூட்டன் புரிந்து கொண்டார். அதன் பிறகு,ஈர்ப்பு என்பது,இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல்படும் ஒரு விசை என்று வரையறை செய்தார். அத்துடன், ஈர்ப்பு விசையானது,இரண்டு பொருள்களின் திணிவுகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். என்றும் நியூட்டன் வரையறை செய்தார். ஆனால் புதன் கிரகமானது, நியூட்டனின் விதிப் படி இயங்க வில்லை.
குறிப்பாகப் புதன் கிரகமானது,சூரியனை நெருங்கும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது முன்னோக்கி வந்தது.
குறிப்பாக, நியூட்டன், கிரகங்களானது தலை கீழ் விதிப் படி இயங்குவதே நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்று நியூட்டன் விளக்கம் கூறினாலும், உண்மையில்,கிரகங்களானது தலை கீழ் விதியின் படி இயங்குவதில்லை என்பது ,புதன் கிரகத்தின் இயக்கம் மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது, சூரியனைக் கிரகங்கள் வலம் வரும் பொழுது ,புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வருவதில்லை. உதாரணமாகச் சூரியனை எண்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வலம் வரும், புதன் கிரகமானது,ஒவ்வாரு சுற்றுக்கும் இருபது மைல் விலக்கம் அடைகிறது.
இந்த நிலையில்,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையின் நீள் வட்டப் பாதையானது எதிர் பார்த்ததை விட,மிகவும் நீளமாக இருப்பது தெரிய வந்தது.
ஏன் இவ்வாறு,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,மற்ற கிரகங்களின் நீள் வட்டப் பாதையை விட ,அதிகம் நீண்டு இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணம் என்று விளக்கம் தெரிவித்தார்.
ஆனாலும்,புதன் கிரகமானது, ஒவ்வொரு சுற்றுக்கும்,சூரியனை நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் பெயர்வதற்கும்,நியூட்டனால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
ஆனாலும்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பால்,கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் திசையிலேயே சிறிது விலகும் என்று நியூட்டனின் கோட்பாட்டின் படி விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தாலும்,நியூட்டனின் கோட் பாட்டு விதிகளின் படியான அளவீடுகளானது,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு்ச் சரியாகப் பொருந்த வில்லை.
இந்த நிலையில், நியூ கோம்ப் என்ற ஆராய்ச்சியாளர், நியூட்டனின்,தலை கீழ் விதியில், சிறிய மாற்றத்தைச் செய்தால், குழப்பம் தீர்ந்து விடும் என்று கூறினார். அதாவது,நியூட்டனின் தலை கீழ் விதியில்,இரு பொருள்களுக்கு இடையிலான ஈர்ப்பு என்பது,அவைகளின் இடைத் தொலைவின் இரு மடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும், என்பதில் இருக்கும் இரண்டுக்குப் பதிலாக,2.00000016, என்று மாற்றினால் குழப்பம் தீர்ந்து விடும் என்று கூறினார்.
அதாவது,சூரியனுக்கு அருகில், நியூட்டன் கூறியதை விட, ஈர்ப்பு விசையானது, சற்று அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது.
ஆனால் இந்தத் திருத்தமானது,மற்ற கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குப் பொருந்த வில்லை.
புதன் கிரகத்தின்,வினோதமான சுற்றுப் பாதைக்கு, சூரியனுக்கும் புதன் கிரகத்துக்கும் இடையில்,இன்னொரு கிரகம் இருக்க வேண்டும் என்றும் அந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசை பாதிப்பே,புதன் கிரகத்தின் வினோதமான சுற்றுப் பாதைக்குக் காரணம் என்றம் நம்பப் பட்டாலும்,அப்படி ஒரு கிரகம் தென்பட வில்லை.
இருநூறு ஆண்டு காலமாக தீர்க்கப் படாத நிலையில் இருந்த, புதன் கிரகத்தின் சுற்றுப் பாதை குறித்த குழப்பத்துக்கு,ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல, மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு.என்று ஐன்ஸ்டீன் கூறினார்.
அதாவது, கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்குச் சூரியனின் ஈர்ப்பு விசையானது, நேராகச் செல்லும் கிரகத்தின் பாதையைத் தொடர்ந்து வளைப்பதே காரணம் என்று, நியூட்டன் கூறிய விளக்கம் தவறு. மாறாகச் சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார்.
ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு. ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது.
பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது. இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது.
உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது.
இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால், சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம்.
இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும். இதே போன்று,புளூட்டோவின் ஈர்ப்பு விசையால்,அதன் நிலவான சரண்,புளூட்டோவை வலம் வரும் பொழுது,சரணின் ஈர்ப்பு விசையால்,புளூட்டோவும்,சிறிய அளவில்,வட்டமடிக்கிறது. அத்துடன், தற்பொழுது,வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று,முழு நிலவு அன்று,கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பதன் மூலமாகவும் ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று,ஸ்ருதினி 3753 என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு விண் பாறையானது,பூமியைச் சுற்றிலும் குதிரை லாடம் போன்ற சுற்றுப் பாதையில், சுற்றிக் கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இரண்டாவது நிலா என்று அழைக்கப் படும் அந்த விண் பாறையானது,குதிரை லாட வடிவில் ,பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதற்கு,பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையின் பாதிப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
எனவே, ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே,புதன் கிரகமானது,ஏன் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியானது, விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது. எனது விளக்கம்- அதே போன்று, மற்ற கிரகங்களும்,ஏன் சூரியனைச் சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்ற கேள்வியும் விடை கூறப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கும்,சாய்வான சுற்றுப் பாதைக்கும்,ஈர்ப்பு விசையுடன்,சூரியனின் அச்சுச் சாய்வும், சூரியனின் நகர்ச்சியும் காரணம்.அதே போன்று, நிலவின் நீள் வட்டப் பாதைக்கும், சாய்வான சுற்றுப் பாதைக்கும்,ஈர்ப்பு விசையுடன்,பூமியின் அச்சுச் சாய்வும், சூரியனுடனான பூமியின் நகர்ச்சியும் காரணம். பூமியானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகமானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதே போன்று,வெள்ளி கிரகமானது,3.39 டிகிரி கோணத்திலும்,செவ்வாய் கிரகமானது,1.85, டிகிரி கோணத்திலும்,வியாழன் கிரகமானது,1.31, கோணத்திலும்,சனி கிரகமானது,2.49,கோணத்திலும்,யுரேனஸ் கிரகமானது,0.77, டிகிரி கோணத்திலும்,நெப்டியூன் கிரகமானது,1.77, டிகிரி கோணத்திலும், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே,ஏன் இவ்வாறு கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. முக்கியமாகச் சூரியனின் துருவப் பகுதியை விட நடுப் பகுதியே, அதிகம் பருத்து இருப்பதால்,அந்தப் பகுதியிலேயே,அதிக நிறை இருக்கிறது. எனவே,சூரியனால், கவர்ந்து இழுக்கப் பட்டு, கிரகமாக மாறிய எரிந்து முடிந்த நட்சத்திரமும்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வரத் தொடங்குகிறது. குறிப்பாக ,சூரியனின் வட துருவப் பகுதியானது,சூரியன் செல்லும் திசையை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியன் நகர்ந்து கொண்டு இருப்பதால்,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகத்தின் சுற்றுப் பாதையானது சாய்ந்து விடுகிறது. அதாவது,சூரியனின் நடுப் பகுதியை கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,சூரியன் முன் நோக்கி நகர்ந்து விடுவதால்,இப்பொழுது,சூரியனின் நடுப் பகுதியை மையமாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது, தற்பொழுது,புதிய இடத்தில் இருக்கும் சூரியனை துரத்திச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. எனவே,ஒரே நேரத்தில்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வருவதற்கு,ஒரு கிரகமானது,சூரியனைப் மேலும் கீழுமாகவும் சுற்ற வேண்டும்,அதே நேரத்தில் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் சூரியனைக் பக்க வாட்டிலும், துரத்திச் செல்ல வேண்டும். அதாவது,விண்வெளியில்,சூரியன்,கிடை மட்டமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் இடுப்புப் பகுதியை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருப்பதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக அமைகிறது.இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதையானது சாய்வாக மாறுவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையும்,சாய்வான கோணத்தில்,நீள் வட்டமாக மாறுகிறது. இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும். அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாறி விடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும். இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது. இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும். இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்,பருத்து இருக்கும் சூரியனின் நடுப் பகுதியைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் திசைக்குத் தொண்ணூறு டிகிரி கோணத்தில்,சூரியனானது, நகர்ந்து கொண்டு இருப்பதே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கும்,சாய்வான சுற்றுப் பாதைக்கும் காரணம். கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வருவதற்குக் காரணம் ஆகும். கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வருவதற்கு, கிரகங்கள் எல்லாம்,சூரியனை வெவ்வேறு தொலைவில் இருந்தபடிவலம் வந்து கொண்டு இருப்பதே காரணம் ஆகும். நிலவானது,சூரியனைப் பூமி ,வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு,ஐந்து டிகிரி சாய்வாக வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன ? சூரியனின் வட துருவப் பகுதியானது,வேகா நட்சத்திரம் இருக்கும்,திசையை நோக்கி இருப்பதுடன்,அதே திசையை நோக்கி,வினாடிக்கு,இருபது கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்,பூமியானது,சூரியனின்,நடுப் பகுதியை,வலம் வர வேண்டும் என்றால்,பூமியானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்குத் தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வர வேண்டும். அவ்வாறு,பூமியானது,சூரியனின்,நடுப் பகுதியை,வலம் வரும் பொழுது, சூரியனானது,முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.எனவே, பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வருவதற்கு,சூரியனுடன்,சற்று முன் நோக்கியும் நகர வேண்டியதாகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே,சூரியனுடன் முன் நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதால்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,சாய்வான கோணத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது. அதே போன்று,நிலவானது,பூமியின்,நில நடுக் கோட்டுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வருவதற்காக, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
எனவே,நிலவும்,பூமியின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வருவதற்காக,பூமியுடன்,முன் நோக்கி நகரும் பொழுது,நிலவின் சுற்றுப் பாதையானது,சாய்வான கோணத்தில் அமைவதுடன்,நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது.
0000
நீள் வட்டப் பாதைக்கு ஆராய்ச்சியாளர்களின் விளக்கம்.
தற்பொழுது , விண்வெளியில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை,வியாழன் அளவுள்ள வாயுக் கோளக் கிரகங்கள்,வால் நட்சத்திரங்களைப் போன்று,நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதை,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இவ்வாறு, அந்தக் கிரகங்கள் ,அதன் நட்சத்திரத்தை,நீள் வட்டப் பாதையில்,வலம் வருவதற்கு, ,தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதன் படி,அருகில் கடந்து சென்ற ஒரு நட்சத்திரத்தின்,ஈர்ப்பு விசையின் பாதிப்பால்,கிரகங்களின் சுற்றுப் பாதையில் மாற்றம் ஏற்பட்டதால்,மற்ற கிரகங்கள் வெளித் தள்ளப் பட்ட பிறகு,ஒரே ஒரு கிரகம் மட்டும் அதன் நட்சத்திரத்தை,வலம் வந்து கொண்டு இருப்பதாக , அறிவியல் உலகில் நம்பப் படுகிறது.
Brucalassi et al.3 show that a class of exoplanet called hot Jupiters can form because of interactions with other celestial bodies. a, Two or more planets form within a protoplanetary disk — the dust and gas surrounding a newborn star — far from the star. b, The disk material accretes onto the star, but also onto the planets, whose masses become similar to that of Jupiter. c, At some point, a dynamical instability occurs, either as an inherent, unstable planetary configuration (shown) or as a result of a passing celestial body such as a star (not shown). d, One of the planets is launched on a highly eccentric orbit, whereas the others either adopt wide orbits or are ejected. e, When the eccentrically orbiting planet passes close to the star, tidal forces cause its orbit to shrink and become more circular. The result is a large planet that has a short orbital period: a hot Jupiter.
00000
வால் நட்சத்திரங்களின் கால மாற்றத்துக்குக் காரணம் என்ன?
சூரியனைச் சுற்றும் வால் நட்சத்திரங்களின் கால மாற்றத்துக்குக் காரணம் என்ன?
புதன் கிரகமானது,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்தாலும்,புதன் கிரகமானது, சூரியனை நெருங்கும் புள்ளியானது, ஒவ்வொரு சுற்றுக்கும்,சிறிது இடம் மாறிக் கொண்டு இருக்கிறது.
ஏன் இவ்வாறு புதன் கிரகமானது,புறப் பட்ட இடத்துக்கு வராமல் ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் மாறிச் செல்கிறது என்ற கேள்விக்கு,நியூட்டனின் கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால், விளக்கம் கூற இயலவில்லை.
நூற்றி தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கேள்விக்கு யாராலும் விளக்கம் கூற இயலவில்லை. அப்பொழுது ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக ''ஈர்ப்பு என்பது விண்வெளியில் ஏற்படும் ஒரு விளைவு''.
அதாவது, கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்கு,சூரியனின் ஈர்ப்பு விசையானது,நேராகச் செல்லும் கிரகத்தின் பாதையைத் தொடர்ந்து வளைப்பதே காரணம் என்று, நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.
மாறாக, சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார்.
ஆனால், ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு.
உண்மையில், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது.
இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம்.
இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும்.
மேலே குறிக்கப் பட்ட வால் நட்சத்திரங்களானது,வியாழன் மற்றும் சனி கிரகத்தின் ஈர்ப்பு விசையால்,பாதை மாற்றத்துக்கு ஆகும்,வால் நட்சத்திரங்கள் ஆகும்.
0000
கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு ஒன்பதாவது கிரகம் காரணமா?
கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு ,ஒன்பதாவது கிரகம் காரணமா? கிரகங்கள் எல்லாம் சூரியனைச் சற்று சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, சூரியனின் முன் நோக்கிய நகர்வே காரணம் என்று நான் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இந்த நிலையில்,கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு ,சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில்,இருப்பதாக நம்பப் படும் ஒன்பதாவது கிரகமே காரணம் என்று ,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
பல ஆராய்ச்சியாளர்கள் ,அதைத் தேடும் பணியிலும் ஈடு பட்டு இருக்கின்றனர்.
Planet Nine may have tilted the other planets over the lifetime of the solar system," said study lead author Elizabeth Bailey, an astrophysicist and planetary scientist at the California Institute of Technology in Pasadena.
ஆனாலும் அந்த ஆராய்ச்சியாளர்கள், 'கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதைக்கு வேறு சில முக்கியமான காரணங்களும் இருக்கலாம்' என்றும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. Bailey did note that there are other potential explanations for the tilt of the solar system.
0000000
மறுபடியும் ஒரு புதிய கிரகம்.ஒன்பதாவது கிரகம்.
கிரகங்களின் இயக்கத்திற்கு காரணம் என்ன ?
கிரகங்கள் எல்லாம் ஏன் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு நியூட்டன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,பூமிக்குப் பொருள்களை ஈர்க்கும் விசை இருப்பதை போலவே, சூரியனுக்கும் கிரகங்களை ஈர்க்கும் விசை இருக்கிறது.அதனால் சூரியனுக்கு அருகில், நேராக செல்லும் கிரகத்தை, சூரியனின் ஈர்ப்பு விசையானது, தொடர்ந்து ஈர்ப்பதால்,அந்தக் கிரகத்தின் பாதையானது,தொடர்ந்து வளைக்கப் படுவதால் கிரகங்களானது, சூரியனைச் சுற்றுகிறது.என்று விளக்கம் கூறினார்.
அவரின் கொள்கையை 'பிரபஞ்ச ஈர்ப்பு விசைக் கொள்கை'' என்று அழைத்தார். இந்த நிலையில்...யுரேனஸ் கிரகத்தின் இயக்கத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில்,யுரேனஸ் கிரகத்தின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு,யுரேனஸ் கிரகத்திற்கு அருகில் வேறு ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்று லே வெரியர் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் கூறினார்.
அதன் அடிப்படையில் பல ஆராய்ச்சியாளர்கள் தொலை நோக்கி மூலம் விண்வெளியை ஆராய்ந்தனர்.அதன் விளைவால் நெப்டியூன் கிரகம் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகமான, புதன் கிரகத்தின் இயக்கத்திற்கு நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை. ஏனென்றால்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது மிகவும் நீள் வட்டம் பாதையாக இருந்தது.
அத்துடன் புதன் கிரகமானது,சூரியனுக்கு அருகில் வரும் புள்ளியானது,ஒவ்வொரு சுற்றுக்கு சிறிது இடம் பெயர்ந்தது. அதாவது புதன் கிரகமானது புறப்பட்ட இடத்திற்கு வராமல், சிறிது இடம் பெயர்ந்ததால், புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே,சூரியனைச் சுற்றுவதைப் போல் இருந்தது. இந்த இயக்கத்தை நியூட்டனின் ''பிரபஞ்ச ஈர்ப்பு விசைக் கொள்கையால்'' விளக்க முடிய வில்லை.
இந்த இயக்கத்திற்கு நியூட்டனால் விளக்கமும் கூற இயல வில்லை. இந்த நிலையில் லே வெரியர்.புதன் கிரகத்தின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு,சூரியனுக்கும் புதன் கிரகத்திற்கும் இடையில் வேறு ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்று விளக்கம் கூறியதும், ஆராய்ச்சியாளர்கள் சூரியனுக்கு அருகில் தொலை நோக்கியால் தேட ஆரம்பித்தனர்.
வல்க்கன் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தக் கிரகமானது,ஒரு கற்பனை என்று தெரிய வந்தது. ''நூற்றி தொண்ணுக்குற்று ஒன்பது'' ஆண்டு காலமாக புதன் கிரகத்தின் இயக்கத்திற்கு விளக்கம் கூறப் படாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில்,ஐன்ஸ்ட்டின் புதன் கிரகத்தின் இயக்கத்திற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார். அதாவது,கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதற்கு நியூட்டனின் விளக்கமே தவறு.உண்மையில் சூரியனுக்கு ''ஈர்க்கும் விசை என்று ஒரு விசையே இல்லை''.மாறாக சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுவதனால், சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகுகிறது,அதனால் சூரியனுக்கு அருகில் நேராகச் செல்லும் கிரகங்களின் பாதையும் வளைக்கப் படுவதால் கிரகங்களானது சூரியனைச் சுற்றுகிறது.என்று ஐன்ஸ்ட்டின் புதிய விளக்கத்தைக் கூறினார்.
அவர் தன் விளக்கத்திற்கு ''வெளி காலம் வளைவு கொள்கை '' என்று அழைத்தார். இந்த நிலையில்,தற்பொழுது நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் கண்டு பிடிக்கப் பட்ட குறுங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வரும் தளத்தில் இருந்து முப்பது டிகிரி வரை விலகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஐன்ஸ்டீனின் கொள்கையின் படி, சூரியனுக்கு அருகில் இருக்கும் வெளியை மட்டுமே வளைக்கும் அளவுக்கு சக்தி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எனவே,நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் இருக்கும் குறுங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வரும் தளத்தில் இருந்து விலகி இருப்பதற்கு,நெப்டியூனுக்கும் அப்பால் வேறு ஒரு பெரிய கிரகம் இருக்க வேண்டும் என்று பாடிஜின் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் கூறி இருக்கிறார்.
அத்துடன் அதனை தேடும் முயற்சியிலும் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடு பட்டு இருக்கின்றனர். ஆனாலும் இன்று வரை அப்படி ஒரு கிரகத்தை யாரும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
கிரகங்களின் இயக்கத்திற்கு எனது விளக்கம். புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, சூரியனை சுற்றுவதைப் போலவே எல்லா கிரகங்களின் சுற்றுப் பாதையும் சூரியனைச் சுற்றுகிறது.இந்த நிகழ்வானது ''பிரிஸிசன்'' என்றும் ''பெரி ஹீலியன் ஷிப்ட்'' என்றும் அழைக்கப் படுகிறது.
புதன் உள்பட அணைத்து கிரகங்களும், சூரியனைச் சுற்றி வரும் பொழுது,புறப்பட்ட இடத்திற்கு வராமல், சிறிது தள்ளி வருவதற்கு( பிரிஸிசன்'' அல்லது ''பெரி ஹீலியன் ஷிப்ட் ) சூரியனானது விண்வெளியில்,வளைவான பாதையில் நகர்வதே காரணம். அதே போன்று, புதன் உள்பட அனைத்து கிரகங்களின் சுற்றுப் பாதையும் சூரியனின் ஈக்வட்டாருக்கு (பூமியின் நில நடுக் கோட்டுக்கு சமம் ) ஆறு டிகிரி வரை விலகி இருக்கிறது.
இதற்கும் சூரியனின் முன் நோக்கிய நகரவே காரணம். அதே போன்று, புதன் உள்பட அனைத்து கிரகங்களின் சுற்றுப் பாதையும்,சூரியன் நகரும் திசைக்கு சாய்வாக இருப்பதற்கும், சூரியனின் முன் நோக்கிய நகர்வே காரணம்.
0000000
ஐன்ஸ்டீன் ஏமாந்தார்.
வெக்னருக்கு முன்பே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரான சார்லஸ் ஹாப்குட் என்பவர்,பூமியின் மேலோடானது வரலாற்றுக் காலத்திலேயே நகர்ந்து இடம் பெயர்கிறது என்று கூறினார். அத்துடன் அவர் தனது கட்டுரையை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களுக்கும் அனுப்பினார். அதைப் படித்துப் பார்த்த ஐன்ஸ்டீன் உங்களின் விவாதம் கவர்ச்சியாக இருக்கிறது என்றும் சரியான கருத்தாக இருப்பதாகத் தோன்றுவதாகவும் கருத்து தெரிவித்தார். "I find your arguments very impressive and have the impression that your hypothesis is correct. One can hardly doubt that significant shifts of the crust have taken place repeatedly and within a short time."
000000
நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.
கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது.
இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச் சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது.
The average period of Halley's orbit is 76 years but you cannot calculate the dates of its reappearances by simply subtracting multiples of 76 years from 1986. The gravitational pull of the major planets alters the orbital period from revolution to revolution.
ஆனால்,ஹாலி வால் நட்சத்திரத்தைப் போல் அல்லாமல்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,ஒரே கால அளவில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு என்று சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
00000
ஈர்ப்பு விசை...நீயா? நானா ?
ஈர்ப்பு.... விசையா... ? வெளியின் வளைவா...? ஐன்ஸ்டீன் கூறிய தவறான விளக்கம். சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் வெளி வளைந்து பள்ளம் உருவாகுகிறது.அதில் கிரகங்கள் விழுந்து எழுவதால் ,கிரகங்களின் பாதை நீள்வட்டப் பாதையாகிறது என்று ஐன்ஸ்டீன் கூறினார். General relativity, in short, tells us that gravity is not quite the force Isaac Newton envisioned; gravity is actually the bending of space and time by mass and energy.
நியூட்டனின் சரியான விளக்கம். ஈர்ப்பு விசை என்பது ‘இரண்டு பொருட்களுக்கு இடையில் செயல்படும் விசை’ என்று விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கூறினார். அதாவது மரத்தின் மேல் இருந்த ஆப்பிள் கீழே விழுந்ததற்கு, ஆப்பிளின் செயல் பட்ட, பூமியின் ஈர்ப்பு விசை மட்டும் காரணமல்ல, மாறாக பூமியின் மேல் செயல் பட்ட, ஆப்பிளின் ஈர்ப்பு விசையும் காரணம், என்பதே நியூட்டனின் விளக்கம்.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்....பூமியும் ஆப்பிளை ஈர்க்கிறது, ஆப்பிளும் பூமியை ஈர்க்கிறது. நியூட்டனின் விளக்கத்தின் படி, சூரியன் மட்டும் கிரகங்களை ஈர்க்க வில்லை.மாறாக,கிரகங்களும் சூரியனை ஈர்க்கிறது. உதாரணமாக,பூமியில் இருந்து 51 ஒளியாண்டு தொலைவில்,இருக்கும்,டா பூட்டிஸ் நட்சத்திரத்தை 40 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில்,வியாழன் கிரகத்தை விட,4.41 மடங்கு அதிக எடையுள்ள வாயுக் கோள கிரகம் ஒன்று,அசுர வேகத்தில்,ஒரு ராட்சச வால் நட்சத்திரத்தைப் போல,மூன்றரை நாளுக்கு ஒரு முறை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த கிரகமானது அதிக எடையுடன் இருப்பதுடன் அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால்,அதன் நட்சத்திரத்தின் போக்கையே கட்டுப் படுத்துகிறது.
அதனால் அந்த கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள்,''நாயை ஆட்டும் வால்'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த கிரக அமைப்பானது நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக் காடாக இருக்கிறது. இதே போன்று விண்வெளியில் ஓரளவு ஒத்த எடையுள்ள இரண்டு ( அல்லது மூன்று ) நட்சத்திரங்களானது, ’ஒரு பொது மையத்தை’ மையமாகக் கொண்டு (barycenter) ஒன்றை யொன்று வலம் வந்து கொண்டு இருப்பதும் கூட, நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்திற்கே சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.
அதாவது ஈர்ப்பு விசையானது பொருள்களின் மேல் நேரிடையாகச் செயல் படுகிறது. உதாரணமாகச் சூரிய மண்டலத்தில், புதன் மற்றும் அதன் நிலவான, சரணும் கூட, இவ்வாறு ஒரு 'பொது மையத்தை' மையமாகக் கொண்டு,ஒன்றை ஒன்று வலம் வந்து கொண்டு இருக்கின்றன. விண்வெளியில் பல நட்சத்திரங்கள் அசைவதை வைத்தே, அந்த நட்சத்திரத்திற்கு அருகில் ஒரு பெரிய கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
இந்த முறையானது ‘ரேடியல் வெலாசிட்டி’ முறை என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு மைய நட்சத்திரமானது வட்டவடிவில் அசைவதற்கு, அதனைச் சுற்றி வரும் கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம். இந்த இயக்கம் கூட, நியூட்டனின் விளக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
00000
நட்சத்திரங்களும், கிரகங்களும் எப்படி உருவாகின?
விண்வெளியில் கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பதற்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வித விளக்கங்களை நம்புகின்றனர்.
முதலாவதாக, நட்சத்திரங்களைச் சுற்றி சுழலும் தூசித் தட்டில் உள்ள வாயுக்கள் மற்றும் தூசிகளானது, ஈர்ப்பு விசையால் உருண்டு திரண்டு ,ஒன்றுடன் ஒன்று மோதி கிரகங்களாக உருவாகலாம் என்று நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தானது ‘’தூசித் தட்டு கொள்கை’’ என்று அழைக்கப் படுகிறது.
இதே போன்று,நட்சத்திரங்களைச் சுற்றி சுழலும் தூசித் தட்டில் உள்ள வாயு மேகமானது,ஈர்ப்பு விசையால் திடீரென்று,சுருங்கி பெரிய வாயுக் கோளங்களாக உருவாகி,வியாழன் மற்றும் சனி போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களாக உருவாகலாம் என்றும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது, ‘’தட்டு நிலை குலைதல் கொள்கை’’ என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில் நான் எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்கி இருக்கிறேன்.
ஆனால்,நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகுகின்றன/ என்பதற்கு ஒரே ஒரு கருத்துதான் இருக்கிறது. அதாவது,விண்வெளியில் இருக்கும் ஹைட்ரஜன் போன்ற இலேசான வாயுக்கள் ஈர்ப்பு விசையால் ஒன்று திரண்டு ராட்சத மேகங்களாக உருவாகுகின்றன. அதன் பிறகு,அந்த விண் மேகங்களில் சில பகுதிகளானது ஈர்ப்பு விசையால் சுருங்கி ராட்சத வாயுக் கோளங்களாக உருவாகுகின்றன.
இவ்வாறு உருவான ராட்சத வாயுக் கோளத்தின் மையத்தில் அதிக அழுத்தம் ஏற்படுவதால்,அங்கே இருக்கும் அணுக்களானது அணுகரு வினையில் ஈடுபட்டு ஆற்றலை வெளிப் படுத்துகிறது. இதனால் அந்த ராட்சத வாயுக் கோலத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.அதனால் அதன் வாயு மண்டலமானது விரிவடைகிறது.
ஆனாலும் பிரமாண்டமான ஈர்ப்பு விசையின் காரணமாக,அந்த வாயுக்களால்,அந்த நட்சத்திரத்தை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறது. இதனால் அந்த நட்சத்திரத்தின் அழுத்தமானது அப்படியே இருக்கிறது.இதனால் அந்த நட்சத்திரத்தின் உள்ளே தொடங்கிய அணுக்கரு வினையானது தொடர்ந்து நடை பெறுகிறது.
இதனால் அந்த நட்சத்திரத்தின் உள்ளே காலப் போக்கில்,ஹீலியம்,ஆக்சிஜன்,கார்பன்,கந்தகம்,போன்ற கனமான தனிமங்கள் உருவாகுகின்றன.இந்த நிலையில் இரும்பு உருவாகும் பொழுது,இரும்பானது பெரும்பகுதி வெப்பத்தை ஈர்த்துக் கொள்வதால்,அந்த நட்சத்திரமானது அணைந்து விடுகிறது.
ஆக மொத்தம் விண்வெளியில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் உருவாக ஈர்ப்பு விசை அவசியம்.ஈர்ப்பு விசைஇல்லையென்றால் ,விண்வெளியில் நட்சத்திரங்களோ அல்லது கிரகங்களோ உருவாக இயலாது.
எனவே ‘’ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல’’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறி இருப்பது,ஏற்கக் கூடிய விளக்கம் அல்ல. ஏனென்றால் விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் இருப்பதே ஈர்ப்பு விசைக்கு சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.
0000
வேற்று கிரகங்களால் நட்சத்திரங்கள் ஏன் அசைகின்றன?
ஈர்ப்பு விசைக்கு ஐன்ஸ்டீன் கூறிய விளக்கத்தைப் பொய்யாக்கிய நட்சத்திரங்களின் அசைவு. ஈர்ப்பு விசை என்பது ஒரு விசை அல்ல என்று, டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது,விண்வெளியில் வேற்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நட்சத்திரங்களில்,அந்த வேற்று கிரகங்களின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் நட்சத்திரங்களின் அசைவு மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் புதன் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,நீண்ட வட்டப் பாதையாக இருப்பதற்கும்,அந்த நீண்ட வட்டப் பாதையும் மெதுவாக சூரியனை சுற்றுவதற்கும் காரணம் என்ன? என்ற கேள்விக்கு ,சர் ஐசக் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை.
இந்த நிலையில்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார். அதாவது,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக ஈர்ப்பு என்பது பொருள்களின் நிறையால் விண்வெளியானது வளைக்கப் படுவதால்,உருவாகும் ஒரு விளைவு என்று விளக்கம் கூறினார்.
குறிப்பாக,சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் படுவதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே,புதன் கிரகமானது பயணம் செய்வதால்,புதன் கிரகத்தின் பாதையானது வளைக்கப் பட்டு நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது என்று, டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பது,சூரியன் உள்பட,மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களால் ஏற்படும் அசைவு மூலம், ஈர்ப்பு என்பது ஒரு விசை என்பதும்,ஈர்ப்பு என்பது இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல் படும் விசை என்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,சூரியனானது,வியாழன் கிரகத்தை ஈர்ப்பது போலவே,வியாழன் கிரகமும் சூரியனை ஈர்க்கிறது. அதாவது, நியூட்டன் கூறியதைப் போன்று ஈர்ப்பு என்பது இரண்டு பொருள்களுக்கு இடையிலான விசை என்பதற்கு ஆதாரமாக ,சூரியனும் வியாழனும் செயல் படுகிறது.
இதானால் சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையம் ஏற்படுகிறது. இந்தப் பொது ஈர்ப்பு மையமானது, பாரி சென்டர் என்றும் அழைக்கப் படுகிறது.
ஆனால்,சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஒரு பொது ஈர்ப்பு மையமானது ,சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் நடுவே ஏற்படாமல்,சூரியனுக்கு மிக அருகில் ஏற்படுகிறது. ஏனென்றால் சூரியனின் எடையானது, வியாழன் கிரகத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம்.
உதாரணமாக,ஒரு பூங்காவில்,இரண்டு சம எடையுள்ள சிறுவர்கள் சீசா பலகையில் விளையாடும் பொழுது,அவர்களுக்கு இடையில் உருவாகும் பொது ஈர்ப்பு மையமானது,அவர்களுக்கு இடையில் சம தூரத்தில் ஏற்படும். ஆனால் அந்த இருவரில் ஒருவன், அதிக எடையுடன் இருந்தால்,அப்பொழுது அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது,அதிக எடையுள்ள சிறுவனின் அருகில் ஏற்படும். இதே போன்று, சூரியனுக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் ஏற்படும், பொது ஈர்ப்பு மையமானது, (barycenter )சூரியனுக்கு அருகில் ஏற்படுகிறது.
இந்த நிலையில் அந்தப் பொது ஈர்ப்பு மையத்தை, வியாழன் கிரகம் வலம் வரும் பொழுது ,அதன் சுற்றுப் பாதையானது பெரிதாக இருக்கிறது.
ஆனால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பொது மையத்தை, சூரியன் வலம் வருவதால் சூரியன் சிறிய அசைவையே ஏற்படுத்துகிறது.
இவ்வாறு வியாழன் கிரகத்தின் ஈர்ப்பால், சூரியன் ஏற்படுத்தும் அசைவானது, நடுக்கம் என்றும் வாப்ளிங் (wobbling) என்றும் அழைக்கப் படுகிறது.
இதே போன்று விண்வெளியில் மற்ற நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களும்,அதன் நட்சத்திரங்களில் அசைவை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு வேற்று கிரகங்களால் நட்சத்திரங்களில் ஏற்படும் அசைவை அறிவதன் மூலம்,அந்த நட்சத்திரங்களை ஒரு வேற்று கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பது அறியப் படுகிறது.
இவ்வாறு ஒரு வேற்று கிரகமானது அதன் நட்சத்திரத்தில் ஏற்படுத்தும் அசைவை அறிவதன் மூலம்,அந்த நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களைக் கண்டு பிடிக்கும் முறைக்கு வாப்ளிங் டெக்னிக் என்றும்,டாப்ளர் முறை என்றும், ரேடியல் வெலாசிட்டி முறை ( radial velocity )என்றும் அழைக்கப் படுகிறது.
டாப்ளர் முறையில் நட்சத்திரங்களின் அசைவை அறிதல்.
சைரனை ஒலித்தபடி, நம்மை ஒரு ஆம்புலன்ஸ் நெருங்கும் பொழுது,ஒலி அலைகளின் நெருக்கத்தால், ஒலியின் அதிர்வெண் அதிகரிப்பதால், ஒலியின் சுருதி அதிகமாகிறது. அதன் பிறகு ,அந்த ஆம்புலன்சானது, நம்மை விட்டு விலகும் பொழுது, அந்த ஆம்புலன்சில் இருந்து வெளிப் படும் ஒலி அலைகளின் நெருக்கமானது, மறுபடியும் விரிவடைகிறது.
அதனால் , ஒலியின் அதிர்வெண் குறைகிறது.அதனால் ஒலியின் சுருதியும் குறைகிறது. இதே போன்று, ஒரு நட்சத்திரமானது நம்மை நோக்கி நகரும் பொழுது,அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளும் நம்மை நோக்கி நகரும் பொழுது, அதன் அலை நீளம் சுருங்குவதால், குறைவான அலை நீளமுள்ள நீல நிறமாக மாறுகிறது.
இதே போன்று,அந்த நட்சத்திரமானது நம்மை விட்டு விலகிச் செல்லும் பொழுது,அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளின் நெருக்கம் குறைகிறது. அதனால் ஒளி அலைகளின் நீளமும் அதிகரிக்கிறது. அதனால்,அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியானது, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறமாக மாறுகிறது.
குறிப்பாக,ஒரு நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை,ஒரு நிறமாலைக் கருவியில் பார்க்கும் பொழுது,தோன்றும் நிற மாலையில்,தோன்றும் கோடுகளானது,நீல நிறத்தை நோக்கி நகர்வதன் மூலம் ,அந்த நட்சத்திரமானது ,நம்மை நெருங்குவதை,அறிந்து கொள்ள முடியும்.
அதே போன்று ,அந்த நிற மாலையில் தோன்றும் கோடுகளானது,சிவப்பு நிறத்தை நோக்கி நகர்வதன் மூலம்,அந்த நட்சத்திரமானது,நம்மை விட்டு விலகிச் செல்வதையும் அறிந்து கொள்ள முடியும்.
வேற்று கிரகங்களால் நட்சத்திரங்கள் ஏன் அசைகின்றன? உதாரணமாக,தொலை தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒரு கிரகமானது வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்த கிரகமானது,அந்த நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் இடையில் வரும் பொழுது,அந்த கிரகத்தின் ஈர்ப்பின் காரணாமாக, அந்த நட்சத்திரமானது,பூமியை நோக்கி சில கிலோ மீட்டர் நகரும்.
அப்பொழுது, அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை நிறமாலைக் கருவியில் பார்க்கும் பொழுது,அதன் அலை நீளம் குறைந்து,நிறமாலைக் கருவியில் நீல நிறத்தை நோக்கி நகரும். இதே போன்று, அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது,பூமியை விட்டு விலகி மறுபடியும் அந்த நட்சத்திரத்துக்கு பின் புறம் செல்லும் பொழுது,அந்த கிரகத்தின் ஈர்ப்பின் காரணமாக,அந்த நட்சத்திரமும் சில கிலோ மீட்டர்,பூமியை விட்டு விலகிச் செல்லும்.
இதனால், அந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியின் அலை நீளமானது, அதிகமாவதால்,நிறமாலைக் கருவியில்,அந்த நட்சத்திரத்தின் ஒளியானது, சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது.
டாப்ளர் முறை என்றும் ரேடியல் வெலாசிடி என்றும் அழைக்கப் படும் , இந்த முறையில், பல நூறு வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு,நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,ஈர்ப்பின் காரணமாக அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவு மூலம்,ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் ஈர்ப்பு என்பது ஒரு விசை அல்ல என்று டாக்டர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
00000
ஐன்ஸ்டீனே!சூரியன் ஏன் அசைகிறது?
சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,பொருள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை செயல் படுவதால்,பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன,என்று விளக்கம் கூறினார்.
உண்மை என்னவென்றால், இன்று சூரியனும் கிரகங்களும் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால்,சூரியனும்,கிரகங்களும், ஒரு பொது மையத்தை மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. குறிப்பாக ' பாரி செனட்டர் ' என்று அழைக்கப் படும் அந்தப் பொது மையத்தை, மையமாகக் கொண்டு, கிரகங்களைப் போலவே, சூரியனும் வலம் வருவதால்,சூரியனானது சிறிது அசைகிறது.
ஆனால், இந்த உண்மைக்கு முற்றிலும் மாறாக,ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல!என்றும்,சூரியனின் நிறையால்,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகுவதாகவும்,அந்தப் பள்ளத்துக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால், கிரகங்களின் பாதையானது,வளைக்கப் படுகிறது , என்றும் திருவாளர் ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
நான் கேட்கிறேன். திருவாளர் ஐன்ஸ்டீன் அவர்களே! சூரியனும் கிரகங்களும் ஏன் ஒரு பொது மையத்தை சுற்றுகிறது ?என்பதற்கு, உங்களின் ‘ ஈர்ப்புக் கோட்பாட்டின் படி ‘ விளக்கம் கூற இயலுமா?
00000
கிரகங்கள் ஏன் சூரியனை, நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன?
பன்னெடுங்காலமாகவே பூமியானது, தட்டை என்றே பலரும் நம்பிக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அரிஸ்டாட்டில் பூமி ஒரு கோளம் என்று கூறினார்.ஆனாலும் அரிஸ்டாட்டில் காலத்தில்,பூமியை மையமாகக் கொண்டு சூரியன் உள்பட மற்ற கிரகங்களும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று நம்பப் பட்டது.
ஆனால் நிகோலஸ் கோபர்நிக்கஸ் என்ற வானியல் அறிஞர்,சூரியனை மையமாகக் கொண்டே பூமி முதலான கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார்.
ஆனால் அவரின் கருத்தை யாரும் நம்ப வில்லை.என்றாலும் அவருக்குப் பின்னால் வானத்தை ஆராய்ந்த கலிலியோ கோபர்நிகஸின் கருத்தை ஆதரித்தார்.
அப்பொழுது கோபர்நிகசின் கருத்தை பொய்யாக்க வேண்டும் என்று,டைகோபிராகோ என்ற ஆராய்ச்சியாளர் முயற்சியில் ஈடுபட்டார்.
அதற்காக ஒவ்வொரு இரவிலும், பின்புல நட்சத்திரங்களுடன், கிரகங்கள் இருக்கும் இடங்களைக் குறித்துக் கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார். டைகோபிராகோ இறந்ததும்,அந்தக் குறிப்புகளை ஆய்வு செய்த ஜோகனாஸ் கெப்ளர்,கிரகங்கள் எல்லாம் சூரியனையே வலம் வந்து கொண்டு இருப்பதை உறுதி செய்தார்.
அத்துடன் கிரகங்கள் எல்லாம்,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதையும் கெப்ளர் அறிந்தார்.
அத்துடன் அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு மூலையில் சூரியன் இருப்பதையும் கெப்ளர் அறிந்தார். மேலும் சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும் பொழுது,கிரகங்களின் வேகமானது குறைவாக இருப்பதுடன்,கிரகங்களானது சூரியனை நெருங்க நெருங்க கிரகங்களின் வேகம் அதிகரிப்பதையும் அறிந்தார்.
ஆனாலும், கிரகங்கள் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை கெப்ளர் அறிந்திருக்க வில்லை.
இந்த நிலையில், கலிலியோ ஒரு சோதனை மூலம்,அரிஸ்டாட்டிலின் விளக்கத்தை பொய்யென நிரூபித்தார். அதாவது,அதிக கனமுள்ள பொருள்கள் வேகமாகவும், குறைவான எடையுள்ள பொருள்கள் மெதுவாகவும் விழும், என்று, அரிஸ்டாட்டில் கூறி இருந்தார்.
இந்த நிலையில்,கலிலியோ,ஒரு சாய்வான மரப் பலகையின் மேல்,திண்மையான மற்றும் இலேசான மரங்களால் ஆன இரண்டு உருளைகளை உருளச் செய்தார். அந்த இரண்டு உருளைகளும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன. அதன் அடிப்டையில், வெவ்வேறு எடையுள்ள பொருட்களானது ஒரே வேகத்திலேயே விழும் ,என்று நிரூபித்து, அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய்யென நிரூபித்தார்.
ஆனால், பொருள்கள் ஏன் விழுகின்றன? என்று அவர் விளக்கம் கூற வில்லை.
இந்த நிலையில் கிரகங்களின் இயக்கத்திற்கு கணித சமன்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டு இருந்த, சர் ஐசக் நியூட்டன் அவர்கள் சூரியனைக் கிரகங்கள் வலம் வருவதற்கு, ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார்.
இந்த நிலையில், கிரகங்கள் ஏன் சூரியனை, வட்டப் பாதையில் வலம் வராமல்,நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன?என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு,நியூட்டன், கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம், என்று விளக்கம் கூறினார்.
ஆனாலும் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது, எதிர்பார்க்கப் பட்டதை விட மிகவும் நீண்டு இருந்தது.
அத்துடன்,புதன் கிரகமானது, ஒவ்வொரு முறையும், சூரியனை நெருங்கும் புள்ளியும், சிறிது இடம் பெயர்ந்தது. அதாவது, புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே, சூரியனை ஒரு கடிகார முள் போன்று மெதுவாகச் சுற்றியது.
இவ்வாறு, புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீண்டு இருப்பதற்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறை சூரியனை நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் பெயர்வதற்கும், நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்தின் அடிப்படையில், விளக்கம் கூற இயல வில்லை.
நியூட்டனுக்குப் பிறகு,இருநூறு ஆண்டு காலாமாக, இந்தக் கேள்விக்கு யாரும் விளக்கம் கூறாத நிலையில்,ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது, ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசையே அல்ல,என்று ஐன்ஸ்டீன் கூறினார்.
அத்துடன் சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது வளைக்கப் படுவதாகவும்,அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகுவதாகவும்,ஐன்ஸ்டீன் கூறினார்.
அந்தப் பள்ளத்துக்கு உள்ளே,கிரகங்கள் எல்லாம் வெவ்வேறு கோணத்தில் பயணம் செய்வதாகாவும்,அதனால் கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக வளைக்கப் படுகிறது என்றும் ஐன்ஸ்டீன் கூறினார்.
ஆனால் ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு. ஈர்ப்பு என்பது விசை என்று நியூட்டன் கூறிய விளக்கமே சரியான விளக்கம்.
குறிப்பாக, நியூட்டன் அவர்கள் ஈர்ப்பு என்பது ஒரு விசை என்றும்,பொருள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை செயல்படுவதால்,பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன, என்று கூறினார்.
இவ்வாறு, விண்வெளியில் பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால், அவைகள் தங்களுக்கு இடையில் இருக்கும் பொது ஈர்ப்பு மையத்தை, மையமாகக் கொண்டு ஒன்றை ஒன்று வலம் வருகின்றன.
நியூட்டனின் கூற்றுப் படி,சூரியனானது கிரகங்களை ஈர்ப்பதைப் போன்றே,கிரகங்களும் சூரியனை ஈர்க்கின்றன. இவ்வாறு சூரியனும், கிரகங்களும், ஒன்றை ஒன்று ஈர்ப்பதால்,சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையில்,பாரி செனட்டர் என்று அழைக்கப் படும்,ஒரு பொது ஈர்ப்பு மையம் உருவாகிறது.
அந்தப் பொது ஈர்ப்பு மையத்தைச் சூரியனும், கிரகங்களும் வலம் வருகின்றன. ஆனால், அந்தப் பொது ஈர்ப்பு மையமானது,அதிக நிறையுள்ள சூரியனுக்கு அருகிலும்.குறைவான நிறையுள்ள கிரகங்களுக்கு தொலைவிலும் இருக்கிறது.
உதாரணமாக, ஒரு சீசா பலகையில்,இரு புறமும்,ஒரே எடையுள்ள இரண்டு சிறுவர்கள் அமர்ந்து இருந்தால்,அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது,அந்த இரண்டு சிறுவர்களுக்கும் நடுவில் ஏற்படும். அதே நேரத்தில், அந்த இரண்டு சிறுவர்களில்,ஒருவர் அதிக எடையுடன் இருந்தால்,அவர்களுக்கு இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது.அதிக எடையுள்ள சிறுவனுக்கு அருகில் உருவாகும்.
இதே போன்று, ஒரு அளவு கோலின் பொது ஈர்ப்பு மையமானது, அந்த அளவு கோலின் மையத்தில் இருக்கும். ஆனால் ஒரு சுத்தியலின், பொது ஈர்ப்பு மையமானது, அந்த சுத்தியலில் இருக்கும், இரும்புக்கு அருகில் இருக்கும்.
இதே போன்று, சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையில் ஏற்படும் பொது ஈர்ப்பு மையமானது, அதிக நிறை உடைய சூரியனுக்கு அருகில் ஏற்படுவதால்,சூரியனானது அதற்கு அருகில் உள்ள மையத்தை வலம் வருவதால்,சூரியனானது சிறிய அளவிலேயே அசைகிறது.
அதே நேரத்தில், சூரியனுக்கு அருகில் இருக்கும் பொது ஈர்ப்பு மையத்தை,தொலைவில் இருக்கும் கிரகங்கள் வலம் வருவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது, பெரிதாக இருக்கிறது.
அதனால் கிரகங்களானது, சூரியனையும் சேர்ந்து வலம் வருகிறது. இவ்வாறு, கிரகங்களின் ஈர்ப்பின் காரணமாகச் சூரியனில் அசைவு ஏற்படுவதன் மூலம்,ஈர்ப்பு என்பது, சர் ஐசக் நியூட்டன் கூறியதைப் போன்று, ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று, விண்வெளியில் இருக்கும் பல நட்சத்திரங்களை,வேற்று கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அவ்வாறு, அந்த நட்சத்திரங்களை வேற்று கிரகங்கள் வலம் வரும் பொழுது,அந்த வேற்று கிரகங்களின் ஈர்ப்பு விசையின் காரணமாக,அந்த நட்சத்திரங்கள் முன்னும் பின்னும் அசைகின்றன.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அந்த அசைவுகளை, நுட்பமான கருவிகள் மூலம் அறிந்து,ஆயிரத்துக்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருகின்றனர்.
எனவே,ஈர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல என்று ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான கருத்து, என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாகக் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு, சர்ஐசக் நியூட்டன் கூறிய விளக்கமும் தவறு.
குறிப்பாகக் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்று விளக்கம் கூறி இருந்தார்.
ஆனால், கிரகங்களின் நிலையானது, ஒவ்வொரு நாளும் மாறக் கூடியது. எனவே உண்மையில் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது,நாளுக்கு நாள் மாற வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல்,கிரகங்கள் எல்லாம் ஒரே மாதிரியான நீள் வட்டப் பாதையில், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. எனவே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு, மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் , என்ற நியூட்டனின் விளக்கமும் தவறு.
எனவே, உண்மையில் கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன்,புதன் உள்பட எல்லா கிரகங்களும், ஒவ்வொரு முறையும், சூரியனை நெருங்கும் புள்ளியானது, சிறிது இடம் பெயர்வதற்கும் என்ன காரணம் ?என்ற கேள்வியும் எழுகிறது.
எனது விளக்கம்.
விண்வெளியில் சூரியன் நிலையாக ஓரிடத்தில் இல்லை. குறிப்பாகச் சூரியனானது, வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில்,பால் வீதி நட்சத்திர மண்டலத்தைச சுற்றியபடி வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு, விண்வெளியில் சூரியனானது வேகமாகப் பயணம் செய்து கொண்டு இருப்பதால்,சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது,நீள் வட்டப் பாதையாக மாறுகிறது.
அத்துடன், விண்வெளியில் சூரியனானது, வியாழனின் ஈர்ப்பு விசையால், சிறிய அளவிலான வட்டப் பாதை நகர்வினால்,வளைவான பாதையில் சென்று கொண்டு இருப்பதால், கிரகங்களானது,ஒவ்வொரு முறையும் சூரியனை நெருங்கும் புள்ளியும்,சிறிது இடம் பெயர்கிறது.
இதனால் அந்த புள்ளியை சுற்றும் கிரகங்களின் பாதையும்,புதன் உள்பட எல்லா கிரகங்களும், ஒவ்வொரு முறையும், சூரியனை நெருங்கும் புள்ளியானது, சிறிது இடம் பெயர் பெயர்கிறது.
0000
கிரகங்களின் சுற்றுப் பாதை ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறித்து ...
உண்மையில் நான் சூரிய மண்டலக் கிரகங்களின் சுற்றுப் பாதை குறித்து ஆராய்ச்சி செய்ய வில்லை.
எனது ஆராய்ச்சியின் மையப் புள்ளியே,கிரகங்கள் எப்படி உருவாகுகின்றன என்பதே. அதற்காக நான் இணையத்தில் வெளியிடப் பட்டு இருந்த,பல வேற்று கிரக அமைப்புகள் குறித்த தகவல்களைப் படித்த பொழுது,பல வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரத்தை,வால் நட்சத்திரங்களைப் போன்று,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பது குறித்து படித்தேன்.
ஆனால், அதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் ஏதும் தெரிவிக்காதது ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது,எனக்கு அந்த வேற்று கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,அதன் தாய் நட்சத்திரங்களின் முன் நோக்கிய நகர்வே காரணம் என்பது புரிந்தது.
எனவே,எனது விளக்கத்தை எனது ’’பூமிப் பந்தின் புதிர்கள்’’ புத்தகத்தில் எழுதினேன். குறிப்பாக,சூரிய மண்டலக் கிரகங்கள் ஓரளவு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்ததால்,அது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
எனவே எனது விளக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல்,ஒரு பக்கத்தில்,மூலையில்,ஓரிரு வாக்கியத்தில் மட்டும் மிகச் சுருக்கமாகத் தெரிவித்து இருந்தேன்.
ஏனென்றால் இது குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட வேண்டும் என்று கருதினேன்.
தொடர்ந்து இணையத்தில் அது தொடர்பான தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்தேன். இந்த நிலையில்,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நியூட்டன் தெரிவித்த விளக்கத்தை நாசாவின் இணைய தளத்தில் படித்தேன்.
குறிப்பாக,நியூட்டன் அவர்கள்,பூமியை நிலா வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நேராகச் செல்லும் நிலவை,சூரியனின் ஈர்ப்பு விசையானது தொடர்ந்து இழுப்பதால்,நிலவின் பாதையானது,தொடர்ந்து வளைக்கப் படுவதாகவும்,அதனால் நிலவின் பாதையானது,வட்டமாக மாறுவதாகவும்,தெரிவித்து இருந்தார்.
அதே போன்று,சூரியனைக் கிரகங்களும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாகவும்,நாசாவின் இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் ,சூரியனைக் கிரகங்களும் நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, நியூட்டனின் விளக்கத்தைப் பற்றி தெரிவித்த நாசாவின் இணைய தளத்தில், அடைப்புக் குறிக்குள் ,ஏறக் குறைய வட்டப் பாதை என்று தெரிவித்து இருந்தது.
எனவே,உண்மையில் நியூட்டன் கூறிய விளக்கமானது நீள் வட்டப் பாதைக்கா அல்லது வட்டப் பாதைக்கா என்று தெளிவு படுத்தப் படாத நிலை இருந்தது.
இந்த நிலையில்,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு,ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதற்கும்,புதன் கிரகமானது ஒவ்வொரு முறையும் சூரியனை வலம் வரும் பொழுது,புறப் பட்ட இடத்திற்கு வராமல்,சிறிது விலகிச் சென்றதற்கும்,நியூட்டனின் ஈர்ப்பு விசை விளக்கத்தின் அடிப்படையில்,விளக்கம் அளிக்க இயல வில்லை என்பது குறித்தும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன்.
இந்த நிலையில்,இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு,இந்தப் புதிருக்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசை அல்ல என்றும்,மாறாக ஈர்ப்பு என்பது,விண்வெளியில்,பொருளின் நிறையால்,விண் வெளி வளைக்கப் படுகிறது. அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார்.
ஆனால், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது.
இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம். இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும்.
எனவே,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு.
என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. எனவே,புதன் கிரகத்தின் சாய்வான சுற்றுப் பாதைக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று,மற்ற கிரகங்களின் சாய்வான சுற்றுப் பாதிக்கும் காரணம் என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் பொதுத் தளத்துக்கு பதினேழு டிகிரி கோணத்தில்,சூரியனைப் புளூட்டோ வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது குறித்தும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன்.
அத்துடன், இன்று வரை புளூடோவின் சுற்றுப் பாதைக்கான காரணம் உறுதி செய்யப் பட வில்லை என்பதையும், இணையம் மூலம் தெரிந்து கொண்டேன்.
முக்கியமாகச் சூரியனும் ,அதன் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில், விண்வெளியில்,இருந்த ஒரு ராட்சத வாயு மேகம் சுருங்கிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும், அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்த தூசி மற்றும் வாயுக்களானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது.
எனவே,தூசித் தட்டுக் கருத்தின் படி,கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாம், சூரியனை ஒரே தளத்தில்,வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால், அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு, நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது, முன் ஒரு காலத்தில்,பூமியின் மேல்,தியா என்று பெயர் சூட்டப் பட்ட,செவ்வாய் கிரக அளவுள்ள,ஒரு கோள் அதி வேகத்தில் மோதியதாகவும், அப்பொழுது ஏற்பட்ட, அதீத வெப்பத்தில்,பூமியின் மேலடுக்குகள் ஆவியாக்கப் பட்டு ,அதன் பகுதிகளானது,பூமியின் சுற்றுப் பாதைக்குத் தள்ளப் பட்டதாக நம்பப் பட்டது.
அதன் பிறகு, பூமி மற்றும் தியா கிரகத்தின் சிதறுண்ட பாகங்களானது, ஒன்றாக இணைந்ததால்,நிலா உருவானதாகவும்,நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படுகிறது.
இந்த மோதலின் பொழுது,அதீத வெப்பம் உருவானதாகவும்,அப்பொழுது பாறைகள் கூட உருகி இணைந்ததாகவும் கூறப் படுகிறது. இது போன்ற அதீத வெப்ப நிலையில்,ஹைட்ரஜன்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்து விட்டிருக்கும், என்பதால் நிலவில் இது போன்ற,எளிதில் ஆவியாகக் கூடிய, வாயுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்த்ததற்கு மாறாக,தற்பொழுது, நிலவில் நீர் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு நிலவில் எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக அளவில் நீர் இருப்பதன் அடிப்படையில்,நிலா எப்படி உருவானது என்பதற்கு கூறப் பட்ட பிரமாண்ட மோதல் கருத்த்தின் மேல் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில்,பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படும் ஒரு நிகழ்வு,நடைபெற வில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே,நிலவானது ஏன்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் வலம் வராமல்,அந்தத் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில்,பூமியை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும்,விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,கிரகங்களின் சுற்றுப் பாதைக்கான காரணம் குறித்து இன்று வரை சரியான விளக்கம் கூறப் படவில்லை.
அதற்குக் காரணம் ஆராய்ச்சியாளர்கள் தூசித் தட்டுக் கருத்தை நம்புவதே ஆகும்.
000
நியூட்டன் பூமியின் நகர்ச்சி பற்றி குறிப்பிட வில்லை.
வட்டப் பாதைக்கும் நீள் வட்டப் பாதைக்கும் ஒரே விளக்கத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலாது.
குறிப்பாக நிலவானது,ஒவ்வொரு சுற்றுக்கும்,பூமியை நெருங்கும் புள்ளியானது,சிறிது இடம் மாறுவதற்கு,பூமியின் வளைவான நகர்ச்சி முக்கிய காரணம் ஆகும்.அதே போன்று சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,பூமியின் வேகமும் மாறுகிறது.குறிப்பாக,பூமியானது சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது அதன் வேகம் அதிகரிக்கிறது,அதே போன்று ,பூமியானது ,சூரியனில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல,பூமியின் வேகமானது குறைகிறது.
இந்த மாற்றங்களும் கூட நிலவின் இயக்கத்தை பாதிக்கிறது.
ஆனால் நியூட்டன் பூமியின் வளைவான நகர்ச்சி பற்றி குறிப்பிட வில்லை.
00000
பாடப்புத்தகத்தில் தவறான கருத்து
தமிழக அரசின் மேனிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் இன்று வரை உறுதி செய்யப் படாத நிலையில் உள்ள கண்டத் தட்டு நகர்ச்சிக் கோட்பாடு இடம் பெற்று இருக்கிறது.அதன் அடிப்படையில் கண்டங்கள் நகர்ந்து மோதிக் கொள்வதால்தான் மலைகள் உருவாகுவதாகவும்,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் உண்மையைப் போன்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இதனால் மாணவர்களிடம் தவறான கருத்து விதைக்கப் படுகிறது.
000000கடல் மட்டமானது,ஒரு கோடி ஆண்டுகளில்2,000 அடி உயர்ந்து இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் மாண்டரி பே அக்வாரியம் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த,டேவிட் கிளாக் என்ற எரிமலை இயல் வல்லுனர்,கலிபோர்னியா மாகாணக் கடல் பகுதியில் இருக்கும எரிமலைகள் பற்றி அறிவதற்காக,ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப் படும் நீர் மூழ்கிக் கலனை .கடலுக்கு அடியில் செலுத்தி, கடலடி எரிமலைகளை வீடியோ படம் பிடித்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ,இரண்டாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,ரோட்ரிகஸ் ,சான் ஜுவான் மற்றும் வட கிழக்கு கடல் திட்டு என்று அழைக்கப் படும் மூன்று கடலடி எரிமலைகளின் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.
ஏனென்றால் அந்த கடலடி எரிமலைகளைச் சுற்றி இருந்த பாறைகளானது ,கடல் அலையால் அரிக்கப் பட்ட தடயங்களுடன் இருந்தது. எனவே அந்த கடலடி எரிமலையில் இருந்து பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த எரிமலைப் பாறைகளில் இருக்கும்,இரும்பானது, காற்றில் இருக்கும் பிராண வாயுவுடன் வேதி வினையில் ஈடு பட்டு,சிவப்பு நிறமாக மாறி இருப்பதை அறிந்தார்.
அதன் அடிப்டையில்,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த கடலடி எரிமலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டத்துக்கு மேலே,கடற்கரையுடன் கூடிய அழகிய தீவுகளாக இருந்ததாக,டேவிட் கிளாக் தெரிவித்து இருக்கிறார்.
தீவு ஏன் மூழ்கியது? தற்பொழுது இந்த எரிமலைத் தீவு இரண்டாயிரம் அடி மூழ்கியதற்கு,அந்த எரிமலையானது ,பூமிக்குள் இறங்கி இருப்பதாக டேவிட் கிளாக் நம்புகிறார். இதே போன்ற விளக்கத்தை விஞ்ஞானி சார்லஸ் டார்வின் அவர்களும் யூகத்தின் அடிப்டையில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் கண்டங்களின் மேல் அமைந்து இருக்கும் மலைகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்களும் மலைகளும் பூமிக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
எனவே ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்த எரிமலைத் தீவானது தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதன் மூலம்,கலிபோர்னியாப் பகுதியில்,கடல் மட்டமானது,ஒரு கோடி ஆண்டுகளில் இரண்டாயிரம் அடி உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
பதிமூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தீவு. இதே போன்று கலிபோர்னியா மாகாணக் கடல் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த,எட்வர்ட் கெல்லர் என்ற புவியியல் வல்லுநர்,கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா கடல் பகுதியில்,கடலடி நில அமைப்புகளின் வரை படத்தை ஆய்வு செய்தார்.
அப்பொழுது கடலுக்கு அடியில்,முன்னூறு அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு திட்டானது பதின் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார். கலாபியா என்று பெயர் சூட்டப் பட்ட அந்தக் கடலடித் திட்டானது ,கடல் தரையில் இருந்து அறுநூறு அடி உயரத்திற்கு உயர்ந்து இருக்கிறது.
அத்துடன் 31 மைல் நீளமும்,மூன்று மைல் அகலமும் கொண்டிருக்கிறது. அந்தக் கடலடித் திட்டின் பாறைகளானது கடல் அலையால் அரிக்கப் பட்ட தடயங்களுடன் இருப்பதாக கெல்லர் தெரிவித்து இருக்கிறார்.
00000
கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததற்கு ஆதாரம்.
ஜெர்மன் நாட்டின் கிரிஸ் வால்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான மார்டின் மிஸ்கிடே,தலைமையிலான குழுவினர்,கரீபியன் தீவுப் பகுதியில்,ஒலி அலைகள் மூலம்,கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களை அறிந்து, அவற்றை கடல் தரை குறித்த வரை படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
அப்பொழுது,கடல் தரையில் பல இடங்களில் மலைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பகுதிகள், சம தளமாக இருப்பதை அறிந்தனர். அதே போன்று ,அந்த வரை படத்தில் சம தளம் என்று குறிப்பிடப் பட்டு இருந்த இடங்களில்,ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) உயரமுள்ள, மலைகள் இருப்பதையும் அறிந்தனர்.
அதே போன்று,அந்தப் பகுதியில், கடல் தரையில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் காணப் படக் கூடிய கூழாங் கற்கள் இருப்பதைக் கண்டனர். அத்துடன் ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய பவளங்கள், நத்தைகள்,மற்றும் பாசிகள் இருப்பதைக் கண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஆச்சரியமடைந்தனர்.
அதன் அடிப்படையில்,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த மலைகளானது,நான்கு முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக இருந்திருக்கின்றன, என்று அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன்,அந்த மலைகளானது, ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் பவளப் பாறைத் திட்டாக இருந்திருக்கலாம் என்றும், நில அதிர்ச்சி காரணமாக கடல் தரைக்கு அடியில் சென்று இருக்கலாம், என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் கருதுகின்றனர். The Greifswald group hypothesises that they were part of a reef that grew on a basalt platform and sank during a seismic event in the ocean’s crust.
ஆனால்,நில அதிர்ச்சியால் ஒன்பதாயிரம் அடி வரை மலைகளோ பீட பூமிகளோ பூமிக்குள் இறங்குவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால்,பூமிக்கு அடியில் செல்ல செல்ல அடர்த்தி அதிகரிப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து பாறைகளும் பாறைக் குழம்புகளும் மேலே வருவதற்கே சாத்தியம் இருக்கிறது.அப்படி உயர்ந்ததால்தான் மலைகளும் பீட பூமிகளும் உருவாகி இருக்கின்றன.
எனவே, கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி ஆழத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் காணப் படக் கூடிய கடல் உயிரினங்களின் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் ,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதையும்,அதன் பிறகு உயர்ந்து இருப்பதையுமே இந்தப் புதைப் படிவங்கள் புலப் படுத்துகிறது.
மேலும்,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து எட்டாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,நைன்ட்டி ஈஸ்ட் ரிட்ஜ் என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆtறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைப் பதிவுகளை,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஆர் ஜெ கார்பென்டர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், ,துளையிடும் கருவிகள் மூலம் பெறப் பட்ட படிவுகளை, ஆய்வு செய்ததன் மூலம் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில்,அந்தக் கடலடி எரி மலைத் தொடர் பகுதியானது,ஒரு காலத்தில் தீவுகளாக இருந்ததாகவும்,தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் போக்கு வரதுக்கும் இடப் பெயர்ச்சிக்கும் பயன் பட்டு இருக்கும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங்கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு,கிலோ மீட்டர் ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,கெர்கூலியன் கடலடிப் பீட பூமியின்,மத்தியப் பகுதில்,இருந்து எடுக்கப் பட்ட,ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான, எரிமலைப் பாறைப் படிவுகளில்,மரங்களின் புதை படிவங்கள் இருப்பதைப் பிரிட்டிஷ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம், கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. தற்பொழுது, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளிவிடும் புகையில் இருக்கும் கரியமில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமியின் வெப்ப நிலையானது உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம்,என்று நம்பப் படுகிறது.
000000
நாசாவுக்கு, வியப்பை ஏற்படுத்திய, விண் பாறை.
விண்வெளியில் இருக்கும் ராட்சத வாயு மேகங்கள்,ஈர்ப்பு விசையால் ஆங்காங்கே சுருங்குவதால், நட்சத்திரங்களாக உருவாகுகின்றன, என்று நம்பப் படுகிறது.ஆனாலும் கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன, என்பது குறிந்து இன்று வரை விவாதங்கள் தொடர்கிறது. இந்த நிலையில்,நாசா விஞ்ஞானிகள், 16 சைக்கி என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு விண் பாறையை ஆய்வு செய்ய, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனென்றால், 210,கிலோ மீட்டர் விட்டமுள்ள,16 சைக்கி விண் பாறையானது,இரும்பு மற்றும் நிக்கலால் ஆகி இருப்பது, தெரிய வந்துள்ளது.இந்த விண் பாறையானது,செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்துக்கு இடைப் பட்ட பகுதியில்,இருந்தபடி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது. 16 சைக்கி, விண்பாறை எப்படி உருவானது ,நாசா ஆராய்ச்சியாளர்களின் விளக்கம்.
தற்பொழுது, பரவலாக நம்பப் படும்,தூசித் தட்டுக் கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில் இருந்த, ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அவ்வாறு, ஒரு கிரகம் உருவான பிறகு,அந்த கிரகத்தில் இருந்த இரும்பு ,நிக்கல் போன்ற கனமான உலோகங்கள் எல்லாம்,அதிக எடையின் காரணமாக,கிரகத்தின் மையப் பகுதியை நோக்கி சென்றதாகவும்,நம்பப் படுகிறது. இவ்வாறு,உருவான ஒரு கிரகத்தின் மேல், ஒன்று அல்லது பல சிறிய கிரகங்கள் மோதியதால்,மேற்பரப்பில் இருந்த,பாறைக் கோளமானது,விண் வெளியில் சிதறிய பிறகு,எஞ்சிய பகுதியாக, அந்த கிரகத்தின் மையத்தில் இருந்த,இரும்பு மற்றும் நிக்கல் கோளம் மட்டும்,ஒரு விண் பாறையாகச் சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதாக,நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக, நமது பூமியின் மையக் கோளமானது,இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது, என்று கருதப் படுகிறது. ஆனாலும்,பூமியின் மையக் கோளத்தை நேரிடையாக ஆய்வு செய்ய இயலாதவாறு,மிகவும் ஆழத்தில் இருக்கிறது.எனவே,, 16 சைக்கி, விண் பாறையை ஆய்வு செய்வதன் மூலம், பூமியின் மையக் கோளத்தைப் பற்றி அறிய இயலும், என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
16 சைக்கி, விண்பாறை எப்படி உருவானது ,எனது விளக்கம். விண்வெளியில்,ஒரு எரிந்து முடிந்த,வாயுக்களை இழந்த, ஒரு நட்சத்திரத்தின் மையத்தில்,நிலவை விடப் பெரிய,வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பது, குறித்த, தகவலின் அடிப்படையிலும்,ஒரு அதி வெப்ப நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக, மூன்று வைரக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது குறித்த, தகவலின் அடிப்படையிலும்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான், கிரகங்கள் உருவாகுகின்றன, என்று, நான் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அவ்வாறு, கிரகங்களை உருவாக்கிய நட்சத்திரத்தின் வாயு மண்டலமானது, அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் வெப்பத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் உள்ளே உருவான கிரகமானது,அருகில் இருக்கும் நட்சத்திரத்தை, கிரகமாக வலம் வரத் தொடங்குகிறது, என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அத்துடன், நம் பூமி உள்பட ,சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் எல்லாம் ,சூரியனால் ஈர்க்கப் பட்ட,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையக் கோளங்கள், என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன். எனது விளக்கத்துக்கு, '16 சைக்கி' சிறந்த ஆதாரமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்தின் வாயுமண்டலமானது, இன்னொரு நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின் மையக் கோளம் மட்டும், எஞ்சிய நிலையில் கிரகமாக உருவாகிறது.
00000
எனது கண்டு பிடிப்பைக் காப்பி அடித்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.
நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கு இடையே ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.
அதாவது,விண் வெளியில் இருக்கும் ராட்சத மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழலும் பொழுது,மத்தியில் இருக்கும் பருத்த பகுதியானது,சூரியன் போன்ற நட்சத்திரமாகவும்,அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருக்கும்,தட்டையான பகுதியில்,இருக்கும் தூசிகள் மற்றும் வாயுக்களானது,ஆங்காங்கே,உருண்டு திரண்டு கிரகங்களாக உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது.
தூசித் தட்டுக் கொள்கை என்று அழைக்கப் படும்,இந்தக் கருத்தானது,நமது சூரிய மண்டலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டது. இந்தக் கருத்தானது சரியா என்று சோதித்துப் பார்க்க எதுவாக,வேறு கிரகக் குடும்பங்கள் எதுவும் கண்டு பிடிக்கப் படாமல் இருந்தது.
இந்த நிலையில்,கடந்த 1992 ,ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக ஒரு வேற்றுக் கிரகம் கண்டு பிடிக்கப் பட்டது. போலந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் வோல்சான் என்ற ஆராய்ச்சியாளர் அந்தக் கிரகத்தை டிஷ் ஆண்டனா போன்ற வடிவில் இருக்கும் ரேடியோ தொலை நோக்கி மூலம் கண்டு பிடித்தார். ஆனால்,அந்த கிரகமோ,நமது சூரியனை விடப் பல மடங்கு வெப்பத்தைக் கதிர் வீச்சாக வெளியிடும் ஒரு பால்சார் நட்சத்திரத்தை மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருந்தது.
இந்தக் கண்டு பிடிப்பானது,தூசித் தட்டுக் கொள்கையைப் புரட்டிப் போட்டு விட்டது. தூசித் தட்டுக் கொள்கையின் படி,ஒரு நட்சத்திரத்துக்கு மிக அருகில் தூசிகளோ அல்லது வாயுக்களோ இருக்கவோ,அந்த தூசிகளும் வாயுக்களும் திரண்டு கிரகங்களாக உருவாகவோ சாத்தியம் இல்லை,என்ற அடிப்படையில், வோல்சானின் கண்டு பிடிப்பு ஏற்றுக் கொள்ளப் பட வில்லை.
இருந்தாலும்,வோல்சான் தன் ஆராய்ச்சியின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தொடர்ந்து ஆராய்ச்சி செய்து,அதே நட்சத்திரத்தை மேலும் இரண்டு சிறிய கிரகங்கள் மிக நெருக்கமாக வலம் கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்தார்.
அதன் பிறகு,அவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்ற ஆராய்ச்சியாளர்களால் சரி பார்க்கப் பட்ட,பிறகு,வோல்சானின் கண்டு பிடிப்பு ஏற்கப் பட்டது.
எனவே,ஒரு அதிவெப்ப நட்சத்திரத்துக்கு அருகே எப்படி,சிறிய கிரகங்கள் ஆவியாகாமல் வலம் வர முடியும் என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு,டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி,பால்சார் நட்சத்திரத்தை,சிறிய கிரகங்கள்,நெருக்கமாக,ஆவியாகாமல்,வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றால்,அந்தக் கிரகங்களின் மேற்ப் பரப்பானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு,வைரப் படிகங்களால்,ஆன வைரக் கிரகங்களாக இருக்க வேண்டும்,என்று ஆஸ்பென் நகரில் நடை பெற்ற விண்வெளி மாநாட்டில்,விளக்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில்,பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள்,விண்வெளியில்,ஒரு எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரத்தின் மையத்தில்,நிலவை விடப் பெரிய,வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில்,நான் எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகு கின்றன என்றும்,அவ்வாறு ஒரு நட்சத்திரத்துக்கு உள்ளே ஒரு கிரகம் உருவான பிறகு,அந்த நட்சத்திரத்தின் வாயு மண்டலமானது,அருகில் இருக்கும் நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,அந்த நட்சத்திரத்துக்கு உள்ளே உருவாகி இருந்த கிரகம் மட்டும்,ஆவியாக்கிய நட்சத்திரத்தை,கிரகமாக வலம் வரத் தொடங்குகிறது என்று தெரிவித்து இருந்தேன்.
ஏனென்றால் விண்வெளியில்,வெற்றிடத்தில் வைரம் உருவாக இயலாது.நிலவை விடப் பெரிய அளவில் வைரம் உருவாக வேண்டும் என்றால் அதற்கு பிரமாண்ட அளவில்,கார்பனும்,அந்தக் கார்பனை வைரமாக்கக் கூடிய அளவுக்குப் பிரமாண்ட அளவில் அழுத்தமும் வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது,என்றும் தெரிவித்து இருந்தேன்.
எனது கண்டு பிடிப்பு பற்றி, 2007,ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம்,விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘பூமிப் பந்தின் புதிர்கள்’புத்தகத்தில் தெரிவித்து இருந்தேன். அதே போன்று இணையத்திலும் வெளியிட்டேன். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.
இந்த நிலையில்,ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த,மாத்தியூ பெயில் தலைமையிலான குழுவினர், கடந்த 2011, ஆம் ஆண்டு,தாங்கள் மேற்கொண்ட ஆய்வில்,ஒரு பால்சார் நட்சத்திரத்தை கண்டு பிடித்து இருப்பதாகவும்,அந்தப் பால்சார் நட்சத்திரத்தின் கதிர்கள், பூமியை வந்தடையும் பொழுது,அதில் சிறிய அளவில் மாறுபாடுகள் ஏற்படுவதாகவும்,அந்த மாறுபாட்டுக்கு,அந்தப் பால்சார் நட்சத்திரத்தை, மிக நெருக்கமாக ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும், தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் கணக்கீடுகள் மூலம்,அந்தக் கிரகமானது, அதிக அடர்த்தியுடன் இருப்பதால்,அந்தக் கிரகமானது, ஒரு வைரக் கிரகம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும்,அந்தக் கிரகமானது,ஒரு நட்சத்திரமாக இருந்தது என்றும்,அந்த நட்சத்திரத்தின்,வாயு மண்டலமானது,பால்சார் நட்சத்திரத்தால்,உரிக்கப் பட்டதால், கிரகமாக உருவாகி இருக்கிறது, என்றும் மாத்யூ குழுவினர் விளக்கம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
00000
000000
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment